26/12/2020

வியாபாரம் செய்யவந்த சில ஆயிரம் ஐரோப்பியர்கள் ( EAST INDIA COMPANY )...

 


கிழக்கு இந்திய கம்பெனி என்ற வியாபார நிறுவனத்தை ஆரம்பித்து கோடிக்கணக்கான மக்கள் கொண்ட இந்தியாவை ஆட்சி செய்தார்கள் என்பது வரலாறு. அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி, படுகொலை செய்து, கடுமையான வரிகளை வசூலித்து நம்மை ஆண்டார்கள் என்பதை நாம நம்புகிறோமா இல்லையா? 

உலகத்தை இல்லுமினாட்டிகள் என்ற பெரும் கார்பொரேட் கம்பெனிகளின் முதலாளிகள் ஆள்கிறார்கள் என்று சொன்னால் மட்டும் ஏன் நீங்கள் நம்புவதில்லை?

நம்மை போன்ற நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பது பொய்.  அவர்கள் நேரடியாக ஆட்சி செய்யாமல்,  பணத்துக்காக எதையும் செய்ய துணிந்த நமது ஆட்களை வைத்தே நம்மை ஆட்சிசெய்கிறார்கள். மக்களாட்சி, தேர்தல் கட்சிகள் MLA MP CM PM எல்லாமே அவர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளது. மதம் ஜாதி கட்சி மொழி இவைகளால் நம்மை பிரித்து வைத்துள்ளார்கள்.  அவற்றிலிருந்து வெளியே வந்து மனிதனாக ஒன்றிணைந்தால் மட்டுமே உண்மையான சுதந்திரம் கிடைக்கும். அதுவரைக்கும் நாம் எல்லோரும் " அடிமைகளே ".

உலக அரசியலை படிக்காமல்,  தெரிந்துகொள்ளாமல் உள்நாட்டு, உள்ளூர் அரசியல் தெரியாது புரியாது.  நடப்பவை எல்லாம் திட்டமிட்டவைகளே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.