10/03/2021

நாதக அண்ணன் சீமான் திருவொற்றியூரில் போட்டி...

 


ஏன் கொளத்தூரில் போட்டியிடாமல் திருவொற்றியூரில் போட்டியிடுகிறீர்கள்.? என்ற கேள்விக்கு அண்ணன் சீமான் அவர்களின் பதில்...

எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி குழுமத்தின் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான் அங்கு களமிறங்குகிறேன். 

அங்கு 350 ஏக்கர் நிலத்தை திமுக கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அதானிக்குக் கொடுத்துள்ளனர். 

இங்கு புதிதாக எதையும் தொடங்க முடியாது. ஆனால், `விரிவாக்கம் செய்து கொள்ளலாம்' என ஒப்பந்தம் போட்டுள்ளனர். 

இதற்காக 6,111 ஏக்கரில் கடலுக்குள் 2,000 ஏக்கர், நிலத்தில் 2,000 ஏக்கர், நதியில் 2,000 ஏக்கர் என துறைமுக விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். 

இதனால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 

இவ்வளவு பெரிய துறைமுகம் எதற்காக? இவர்கள் எதனை ஏற்றுமதி செய்வார்கள்? 

அதானி வந்துவிட்டால், மற்ற துறைமுகங்களை மூடிவிடுவார்கள். 

இதனை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் போட்டியிடுகிறேன் என்கிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.