04/11/2021

கல்லறையிலும் காத்திருப்பேன் உனக்காக...

 




உன் நினைவுகளை 
எனக்குள் புதைத்துவிட்டு...

நீ எங்கே சென்று
நிம்மதியாய் வாழ்கிறாய்...

உன் வருகைக்காக 
காத்திருந்து காத்திருந்து...

நான் வாடியது
தான் மிச்சம்...

உன்னை நினைத்து 
நான் - என் 
நண்பர்களை தொலைத்தேன்...

என் வாழ்கையும் 
தொலைத்து கொண்டு 
இருக்கிறேன்...

நீ என்றாவது 
உன் மழலையோடு
வரும்போது...

நான் இருப்பேன்...
கல்லறையில்...

உன் நினைவுகளை 
சுமந்தபடி ...

கண்களில் 
இரத்த கண்ணீருடன்...

உன்னால் ஏமாற்றப்பட்ட
உன் காதலன்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.