16/04/2017

வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதற்கான 10 வழிகளை கூறுகிறேன் - கெஜ்ரிவால்...


மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பிக்கைத் தன்மையற்றவை, அவற்றில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

இதன் காரணமாக மின்னணு ஓட்டு எந்திரங்களை கைவிட்டு விட்டு, பழையபடி ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.

ஆனால் மின்னணு ஓட்டு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது என தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக கூறி வருகிறது.

இதையடுத்து, வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்ட முடியுமா? என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் நேரடி சவால் விடுத்தது.

வரும் மே முதல் வாரத்தில் இருந்து மே 10 ஆம் தேதிவரை நிபுணர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர் என யார் வேண்டுமானாலும் முறைகேடு செய்து காட்டுங்கள் என தேர்தல் ஆணையம் நேரடி சவால் விடுத்து உள்ளது.

இந்த நிலையில், இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது...

நான் ஒரு ஐஐடி என்ஜினியர், வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்வதற்கான 10 வழிகளை நான் கூறுகிறேன்.

புனே தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை உறுப்பினர் தனக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை. நான் அளித்த வாக்கு எங்கே போனது என்று அவர் கேட்கும் போது, வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை பற்றி நாங்கள் ஏன் கேள்வி எழுப்ப கூடாது என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.