16/04/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 17...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரில் இன்று இடம் பெறும் அனைத்து விஷயங்களும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. முக்கியத்துவம் என்பது மக்கள் கவனத்துடன் இதில் இடம் பெறும் குறிப்புகளை கவனிக்க வேண்டும் என்பதே அதுவாகும்.

வருங்காலத்தைப் பற்றிய தீர்க்க தரிசனங்களே ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த தொடரில் வெளிப்படுத்தப் படுகின்றன.

அவ்வாறு பார்க்கையில் இந்த 17-ம் தீர்க்க தரிசனம் எதைப் பற்றி இங்கு குறிப்பை தருகிறது என பார்ப்போம்.

அதாவது தூர தேசமான இரஷ்யாவில் ஆன்மீக புரட்சி ஒன்று வெடிக்க உள்ளதாகவும், இந்த புரட்சியானது கம்யூனிஸ்ட் ஆதிக்க நாடுகளிடையே ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் 17-ம் தீர்க்க தரிசனம் குறிப்பிடுகிறது.

இந்த ஆன்மீக புரட்சியானது ரஷ்ய நாட்டில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும்,

இந்த மாற்றத்தினால் இந்திய - இரஷ்ய நாடுகளுக்கிடையே ஒரு பரஸ்பர நட்புறவு  ஏற்படும் என்றும்,

இதனால் இந்திய தேசத்தில் பல முன்னேற்றங்களும் அறிவியல் சார்ந்த வளர்ச்சிகளும் ஏற்படும் என்று 17-ம் தீர்க்க தரிசனம் மேலும் சில குறிப்புகளை தருகின்றது.

மக்களை ஆட்சி செய்யும் அனைத்து ஜனநாயக நாடுகளும் இந்தியாவின் நட்புறவை வேண்டி இந்திய தேசத்தில் தமது தொழில் முதலீடுகளை செய்ய விரும்புவார்கள் என்றும்,

அச்சமயத்தில் உலகளாவிய அளவில் பெரும் இயற்கை சீற்றங்கள் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தும் என்றும்,

அதனால் தமது தொழில் முதலீடுகளை செய்ய இந்திய தேசமே சிறந்த தேசம் என்ற முடிவிற்கு பிற தேசங்கள் வரும் என்றும்,

இதனால் இந்தியா 2020-க்குள் பெரும் வளர்ச்சியடைந்த வல்லரசு நாடாக மாறும் என்றும் 17-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது.

அந்நிய நாட்டு படையெடுப்பால் ஈராக் நாடு பெரும் பாதிப்பு அடையும் என்றும்,

அச்சமயத்தில் எண்ணெய் வளங்கள் குறையும் என்றும்,

இச்சமயத்தில் இந்தியாவின் பூகோள அமைப்பில் புதிய எண்ணெய் வளங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிவார்கள் என்றும்,

இதனால் உலக நாடுகளில் இந்தியா சிறப்பான இடத்தை பொருளாதாரத்தில் அடையும் என்றும் 17-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு புதிய குறிப்பை தருகின்றது.


காலத்தால் அழியாத பல காவியங்களை இனி உலகமே இந்திய தேசத்திலிருந்து காணப் போகிறது என்றும்,

புதுப்புது கண்டு பிடிப்புகள், புதுப்புது தொழில் நுட்பங்கள், பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள், விவசாயத்தில் மாபெரும் பசுமைப் புரட்சி, கடல் சார் துறைகளில் அசுர வளர்ச்சி என இந்திய தேசம் பல முன்னேற்ற துறைகளை உலகம் அறியும்படி சாதனை செய்ய உள்ளதாக 17-ம் தீர்க்க தரிசனம் எடுத்துக் கூறுகிறது.

விக்டோரியா மகாராணி வாழ்ந்த நகரில் ஒரு அதிசயம் வெளிப்படும் என்றும்,

அது கிருஸ்துவ மதத்தினரிடையே ஆழ்ந்த இறை நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் அச்சமயத்தில் ஜெருசல நகரின் முக்கிய வீதி ஒன்றில் மகா சக்தி வாய்ந்த பூமி அதிர்வு ஒன்று ஏற்படும் என்றும், இதனால் மக்கள் பீதியில் ஆழ்வார்கள் என்றும்,

அது நிகழ்ந்த 6 மணி நேரத்திற்குள் அந் நகரில் ஒரு இறை அற்புதம் ஏற்படும் என்றும்,

அன்று உலகத்திற்கு இறைவன் கர்த்தர் வழியில் ஒரு புதிய தீர்க்க தரிசனத்தை கிருஸ்துவ மக்களுக்கு அறிவிப்பார் என்று 17-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு இறைக் குறிப்பை நமக்கு தெரிவிக்கின்றது.


புனித மெக்கா மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நகரம் என்றும்,

அங்கும் மாபெரும் இறை அதிசயம் ஒன்று நடக்க உள்ளது என்றும்,

அது நபிகளின் நினைவு நாளில் நடக்க உள்ளது என்றும்,

இறை மகனார் அங்கு தூய ஆவி வடிவில் காட்சி அளிக்கக்கூடிய மகா அற்புதமான நிகழ்வு ஒன்று நடைபெற உள்ளது என்றும்,

அச்சமயத்தில் வான்வெளியில் தூய ஆவி ஒன்று சூரியனைப் போன்று பிரகாசித்து தென்மேற்கே நகர்ந்து சென்று, ஒரு புனித மலையில் இறங்கும் என்றும்,

அந்த இடத்தில் புனித நீரூற்று ஒன்று தோன்றி ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த நிகழ்வு இஸ்லாம் மக்கள் சமூகத்திற்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்றும்,

அச்சமயத்தில் உலக இஸ்லாம் மக்களிடையே மகத்தான மாற்றம் நிகழும் என்று 17-ம் தீர்க்க தரிசனம் மிக முக்கிய குறிப்பை தருகின்றது.

காலத்தின் சுழற்சியில் சிக்குண்டு கடலுக்குள் மறைந்த துவாரகையின் ஒரு பகுதி கடல் மட்டத்திற்கு மேலே வரும் என்றும்,

அக்கால கோபியர் கொஞ்சி மகிழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு மாபெரும் பொக்கிஷம் வெளிவரும் என்றும்,


அதனை ஆய்வு செய்யும் பொழுது உலகமே கண்டு வியக்கும் அளவிற்கு கிருஷ்ண பகவானின் அடுத்த அவதாரம் எங்கே உள்ளது? என்ற புதுமையான குறிப்பை கண்டு மக்கள் ஆச்சர்யப்படுவார்கள் என்றும்,

அச்சமயத்தில் உலகளந்த பெருமானின் சந்நதி ஒன்றில் மகா அதிசயம் ஒன்று நடைபெறும் என்றும்,

அச்சமயத்தில் குமரிக்கடலில் பெரும் கொந்தளிப்பு ஒன்று உருவாகி அச்சுறுத்தி அதன்பின் ஓயும் என்றும் இறை தீர்க்க தரிசனம் ஒன்று மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

மன்னர் ஆட்சியால் மக்கள் நிம்மதி இழந்த ஒரு நாடு இயற்கையின் சீற்றத்தால் பெரும் அழிவை சந்திக்க உள்ளது என்றும்,

இதனால் அந்நாட்டு மக்கள் செய்வதறியாது குழம்பி நிற்கும் சமயத்தில் அங்கும் ஒரு தெய்வீக தீர்க்க தரிசனத்தின் படி மாபெரும் அதிசயம் ஒன்று நடைபெறும் என்று 17-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.