30/04/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 44...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தொடரில் இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தீர்க்க தரிசனப் பகுதி 44-ம் பகுதியாகும். இதன் முக்கியத்துவம் என்னவென்பது பற்றி நாம் அறிந்து கொள்ளும் குறிப்புகளே இந்த பகுதியாகும்.

ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் 44-வது தீர்க்க தரிசனப் பகுதி, வருங்காலம் என்பது பல உபத்திரங்கள் நிறைந்த பகுதி என்று குறிப்பிடுகின்றது. அதாவது நவக்கோள்களும் ஒரே வரிசையில் சந்திக்கும் ஆபூர்வ நிகழ்வு ஒன்று தற்போது நடைபெறும் என்றும், அவ்வாறு நடைபெறும் சமயத்தில் உலகில் உள்ள இறைக்கு எதிரான முஸ்லீம் நாடுகளில் கொடிய அழிவுச்சம்பவங்கள் தற்போது நடக்கும் என்று 44-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

காலத்தால் யாரும் மறக்க முடியாத அளவிற்கு பல சோகச் சம்பவங்கள் எண்ணெய் வளம்மிக்க நாடுகளில் தற்போது நடைபெற உள்ளதாகவும், அவ்வாறு அது நடந்து கொண்டியிருக்கும் சமயத்தில்  இஸ்ரேல் என்ற நாட்டில் ஒரு கொடிய நோய் பரவி பல்லாயிரம் மக்கள் இறப்பார்கள் என்று மற்றொரு தீர்க்க தரிசனம் இந்த 44-ம் பகுதியில் தனது குறிப்பை வெளிப்படுத்துகின்றது.


சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கும்படி நிகழ்கால நிகழ்வுகள் அமைய உள்ளதாக 44-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. அதாவது மேற்கு இந்திய நாடுகளில் பல ஆன்மீகவாதிகள் தமது அருளுரையை உலகத்திற்கு வழங்குவார்கள் என்றும், அவர்களின் கூற்றுப்படி அந்த நாடுகளில் பல அழிவுச் சம்பவங்கள் நடக்கும் என்று 44-ம் தீர்க்க தரிசனம் ஒரு விளக்கத்தை தருகிறது.


முன்பு ஒரு காலத்தில் கடற்கரை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் வினோத முகஅமைப்பை  உடைய மனிதர்கள் வாழ்ந்து வந்ததாகவும், அவர்கள் மனித குலத்தையும், விண்ணுலகத்தையும் சாராதவர்கள் என்றும், அவர்கள் பாதாள உலகத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒரு புராதனக்கதை உண்டு. அவர்கள் மனிதர்கள் போன்றும், விலங்கினத்தை போன்றும் மாறக்கூடியவர்கள் என்று கிருஸ்துவ புராணங்களில் கதைகள் உண்டு. அவர்களின் பூர்வீக வரலாற்று தொடர்புடைய வாழ்வியல் சான்றுகளும், அவர்களின் மம்மிகளையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் தற்சமயம் கண்டறிவார்கள் என்றும், அதே சமயத்தில் ஓமன் நாட்டில் மனிதகுலம் அழியும் ஒரு மகாதுயரச்சம்பவம் தற்சமயம் நடைபெறும் என்று 44-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

சுமேரியா நாட்டில் ஒரு இனக்கலவரம் ஏற்படும் என்றும், அந்த இனக்கலவரத்தின் போது ஏற்படும், மக்களுக்கிடையே ஆன ஒரு கலவரம், ஒரு நிகழ்கால உண்மையை உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டும் என்றும், இதுவும் சமீபத்தில் நடக்க கூடிய ஒரு விஷயம் என 44-ம் தீர்க்க தரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு முஸ்லீம் நாடுகள் ஒருங்கிணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்றும், அச்சமயத்தில் தொழுகை நேரத்தின் போது ஒரு மகா சோகச்சம்பவம் ஒன்று ஏற்பட்டு மக்கள் அவஸ்தைக்கு ஆளாவார்கள் என்று 44-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


போக்குவரத்து துறையில் பல புதுமைகளும், முயற்சிகளும் நடைபெறும் என்றும், இந்தியா அதில் ஒரு முக்கிய முடிவை எடுத்து தமது சாதனைகளை நிகழ்த்தி காட்டும் என்று 44-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.

கடல் தேசத்து நாடுகளின் கரையோர கிராமங்களில் பல ஊடுருவல் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும், அத்தகைய நிகழ்ச்சிகளால் பல குழப்பங்கள் ஏற்பட்டு நாடுகளில் கலவரங்கள், பீதிகள் ஏற்படக்கூடும் என்று 44-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

தென்திசை நாடுகளுக்கு இடையே பல அதிசயங்கள் நடக்கும் என்றும், இது இறைவனின் ஒட்டுமொத்த அதிசய நிகழ்வாக அமையும் என்றும், இச்சமயத்தில்தான் உலகம் ஒரே ஒரு கடவுளாக ஒருவரை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்றும், அப்பொழுது அனைத்து நாடுகளிலும் இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஒரு இயக்கத்தை ஆரம்பித்து உலக மக்களை அதில் ஒன்றிணைப்பார்கள் என்று 44-ம் தீர்க்க தரிசனம் அற்புதமான ஒரு குறிப்பை தருகின்றது.


பருவமழை ஒன்று இச்சமயத்தில் உருவாகி தமிழ்நாட்டில் பலத்த சேதத்தை உருவாக்கும் என்றும், பல ஊர்கள் மழை நீரால் பாதிப்படையும் சம்பவம் வெகுவாக நடைபெறும் என்றும், மக்கள் ஒருவித அச்சத்திற்கு ஆளாக நேரிடுவார்கள் என்று 44-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

மக்களின் மனநிலையில் பல புதுமைகளை காணவேண்டிய காலகட்டமாக இக்காலகட்டம் இருக்கும் என்றும், இச்சமயத்தில் ஒரு அதிசய மலை இவ்வுலகத்தின் மக்கள் கண்களுக்கு புலப்படவும், அதன் விபரங்களை அவர்கள் அறிந்திடவும் செய்வார்கள் என்று 44-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கு வெளிப்படுத்துகிறது..

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.