30/04/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 45...


உலக வரலாற்றில் ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற இந்த வருங்கால தீர்க்க தரிசனங்கள் இடம்பிடிக்க உள்ளதாக 45-ம் தீர்க்க தரிசனம் இன்று மெய்பட கூறுகிறது. உலகில் நடக்கும் வருங்கால நிகழ்வுகளைப் பற்றி இவ்வளவு விரிவாக எவரும் தீர்க்க தரிசனங்களை வெளிப்படுத்தவில்லை என்றும், இதுவே உலகில் முதன்மையானதாக விளங்கிடப் போவதாக 45-ம் தீர்க்க தரிசனப்பகுதி இங்கு எடுத்து கூறுகிறது. அதுமட்டுமின்றி இந்த 45-ம் தீர்க்க தரிசனம் பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி இங்கு எடுத்துக் கூறுகிறது.

45-ம் தீர்க்க தரிசனம் இவ்வுலகில் பல புதுமைகள் நடந்திட இருப்பதாகவும், அவைகள் முழுக்க முழுக்க இறைவன் சார்ந்த புதுமைகளாக, இவ்வுலகம் முழுவதும் நடந்த  பல ஆச்சர்யங்களை ஏற்படுத்தும் என்றும், அந்த புதுமைகளில் ஒன்று இந்திய தேசத்தில், தமிழகத்தில், சேலத்தில் நடக்க இருப்பதாகவும், அனைத்து மதத்தினரும் ஒன்றிணையும் ஒரு சம்பவமாக இது இருக்கும் என்று 45-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை இங்கு எடுத்துக் கூறுகிறது.


புண்ணியங்கள் நிறைந்த தேசம் இந்திய தேசம் என்றும், அதற்கு இப்பூமியில் ஏற்கனவே அவதரித்து வாழ்ந்த மனிதர்களையே அது சாரும் என்றும், அந்த வகையில் இப்பூமியில் ஒரு மகான் பல அற்புதங்களை மக்களிடையே செய்து பேரும், புகழையும் அடைந்தார் என்றும், அவர் தற்பொழுது தனது சுயஉருவத்துடனே பல்வேறு இடங்களில் தோன்றி பல அற்புதங்களை செய்யும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என்றும், அவரே முஸ்லீம், இந்து மக்களின் ஒற்றுமைக்கு வித்தாக அமைவார் என்று 45-ம் தீர்க்க தரிசனம் இங்கு ஒரு அதிசய குறிப்பை வெளிப்படுத்துகின்றது.


சூப்பர் நோவா என்ற கப்பலை ஒரு நாடு இரகசியமாக தயாரித்து வரும் என்றும், அதற்கு ஹிட்லரின் மகா கண்டு பிடிப்பை அந்நாட்டு அறிவியல் அறிஞர்கள் பயன்படுத்தி வெற்றி காண்பார்கள் என்றும், அதனை முறையாக அவர்கள் பயன்படுத்தும் சமயத்தில் அதனை வேற்று கிரகவாசிகளால் கையாடல் செய்யப்படும் என்றும், அதன் பின்னர் தான் அதன் தொழில்நுட்பம் வேற்று கிரகவாசிகளுடையது என்றும், அக்காலத்தில் நாசிப்படைகளை கொண்டு ஹிட்லர் கைப்பற்றிய இரகசியம் தெரியவரும் என்று 45-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


கிறிஸ்துவ அமைப்புகளுக்கு இடையே ஒரு அச்சமான கருத்து நிகழ்வதாகவும், அது 666 என்ற எண்ணைப்பற்றிய கருத்து என்றும், அது சாத்தானின் எண் என்ற கருத்தும், அவர்களை அச்சமடைய அது ஒரு காரணமாக இருக்கும் என்றும், அதற்கான முழுவிளக்கத்தை உலக கிருஸ்துவ அமைப்பு ஒன்று முழுமையான விளக்கத்தை தரும் என்றும், இது உலக கிருஸ்துவர்கள் இடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இச்சமயத்தில் இயேசுவின் அற்புதம் ஒன்று பூமியின் மீது நிகழ்ந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று 45-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


இந்திய சித்தர்கள் ஒன்றிணைந்து ஒரு மகா அற்புதத்தை சேலம் மலைப்பகுதி ஒன்றில் நிகழ்த்திட உள்ளதாகவும், அன்றுமுதல் உலக மக்களுக்கு அவ்விடம் ஒரு புனித இடம் என்று தெரிய வரும் என்றும், அந்த நாள் மிக, மிக சமீபமாக உள்ளது என்றும் 45-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


தருமபுரியில் ஒரு தங்கப்புதையலை மக்கள் கண்டெடுப்பார்கள் என்றும், அது இந்திய தேசத்தை சார்ந்திராத அதே சமயத்தில் எகிப்திய கலாசாரத்தை ஒத்த ஒரு கலாச்சார புதையலாக காணப்படும் என்ற அதிசய குறிப்பை 45-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

இறைவன், இறைவி என்ற கோட்பாடுகள் இந்து மதத்திற்கே உரிய வழிமுறைகள் என்றும், அந்த வகையில் உயரிய ஒரு புனித ஆத்மாக்கள் வழியே இறைவன் இவ்வுலகத்தில் பல அற்புதங்களை செய்ய உள்ளார் என்றும், இவர்களைப் பற்றிய குறிப்புகளை உலக மக்கள் இனி ஒரே சமயத்தில் வெளிப்படுத்திட உள்ளார்கள் என்ற குறிப்பை 45-ம் தீர்க்க தரிசனம் இங்கு எடுத்துக் கூறுகிறது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.