14/04/2017

விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...


வரும் செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 18, 2017) மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மெப்ஸ் ஊழியர்கள், டைடல் பார்க் ஊழியர்கள், டி.எல்.எஃப் மற்றும் பிற வளாக ஐ.டி ஊழியர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு எடுத்த முயற்சியின் மூலம் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரியும், நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் வர உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரியும் ஐ.டி ஊழியர்கள் சார்பாக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஒருங்கிணைப்பில் தாம்பரம் சண்முகம் தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது, அதற்கு பதிலாக பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது காவல் துறை.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பெருமளவில் பிரச்சாரம் செய்து பெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.