14/04/2017

பிரேசில் மர்ம மனிதன்...


பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருத்தர், 14 புத்தகங்கள் எழுதி வைத்துவிட்டு, மர்மான முறையில் காணாமல் போய் விட்டார் என்று ஊரே பரபரப்பா இருக்கு. அப்படி என்ன அந்த மனுஷன் எழுதி வச்சாருனு பார்த்தால், 14 புத்தகம் பூரா ரகசிய குறியீடு மொழில எழுதிட்டு போய்ட்டாரு.

யாரு சாமி இவரு?

அவர்  பெயர் புருனோ (Bruno Borges) , ஒரு மாதம் முழுதும், ஒரே அறைக்குள் இருந்து தன் கைப்பட 14 புத்தகம் மட்டும் இல்லாமல், சுவர் எங்கும் ரகசிய குறியீட்டில் எழுதியுள்ளார். இதில், சில வரைபடங்களை அடங்கும்.


மேலும் புதிர்போடும் வகையில், இத்தாலிய தத்துவவாதி ஜியோர்டனோ ப்ரூனோ (Giordano Bruno) என்பவரின் சிலை ஒன்றை செய்து வைத்துள்ளார், அதன் விலை 2500 டாலர்கள்.

அறைக்குள் புத்தகங்கள் யாவும் நேர்த்தியாய் அடிக்கிவைக்க பட்டு இருந்தன. வீட்டில் உள்ளோரை கேட்டால், எப்படி சிலை வந்தது என்று தெரியவில்லை. அவர் அம்மா, என் மகன் புத்தகம் எழுதுகிறேன், உலகை நல்வழியில் மாற்றிடும் புத்தகம் அவை என்று கூறினான், என்றார்.

எல்லாம் முடித்துவிட்டு, மார்ச் 27 அன்று மாயமாகி போனார்.


சுவரில் அவரும், உடன் ஒரு வேற்றுகிரக வாசியும் உள்ளது போல் புதிர் ஓவியம் ஒன்றும் தீட்டப்பட்டு உள்ளது.

சுவரெல்லாம் எழுதிவச்சிருக்காரு, அட மனுஷன் ஒரு இடம் விடவில்லை.


விடை தேடி, தலை பித்து கொண்டு வீட்டாரும் , காவல் துறையும்.

வேற்றுகிரக வாசிகளோடு தொடர்பு படுத்துவதா? எழுதியதை எப்படி மொழிபெயர்ப்பது என்ற பல குழப்பங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.