16/05/2017

தமிழ் நாடு அரசு என்கிற வார்த்தை தவறு...


குறிப்பு : சமீபத்திய ஒரு நிகழ்வை மையமாக கொண்டு.. இப்பதிவை எழுதியுள்ளேன்.. நடுநிலையான மக்கள் மட்டும் தொடருந்து வாசிக்கவும்.

தமிழுக்கு தொண்டு செய்த தமிழறிஞர் தொல்காப்பியர் இன்று உயிருடன் வந்து.. நான் நேற்று இந்த புத்தகத்தை கடையில் வாங்கினேன் என்று அவரிடம் நாம் சொன்னால்.. அவருக்கு ஒன்றுமே புரியாது..

காரணம் நான் மேலே சொன்ன வார்த்தைகள் எல்லாமும் அவர் காலத்திற்கு பிறகு மருவி மாற்றமாகி வந்து விட்டது,

பின்னர் எப்படி தான் சொல்ல வேண்டும்?

அதாவது தூயதமிழ் எது ?

யான் நெருநல் இந்நூலை அங்காடியிற் கொண்டேன்

என்பது தான் முழுமையான தமிழ்..

இப்படி சொன்னால் தான் தொல்காப்பியர் திருவள்ளுவர் போன்றவர்களுக்கு புரியும் ....

ஆங்கிலமே இல்லாமல் தமிழை குளறுபடி செய்தது நம்மவர்கள் தான்...

அதே போன்று மற்றும் என்ற வார்த்தை பிரயோகம் நம்மால் தவிர்க்க முடியாத ஒன்று இந்த வார்த்தையை தமிழ் பண்டைய இலக்கணக்கில் அதிகம் உபயோகிக்க வில்லை.

இது எப்படி தெரியுமா உருவானது ஆங்கிலத்தில் தண்ணீருக்கு water என்கிறோம்.

அதே நேரத்தில் the water என்றாலும் அதே அர்த்தம் தான் to water என்றாலும் அதே அர்த்தம் தான் ...

இப்படி தான் இந்த மற்றும் என்ற வார்த்தை உருவானது.

ஒரு பேச்சாளர் நிகழ்ச்சியை துவங்கும் முன் நன்றி சொல்லும் பொழுது அவருக்கு நன்றி இவருக்கு நன்றி..

மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் நன்றி என்பது போன்று ...

இங்கு மற்றும் என்ற வார்த்தை அவசியமற்றது தான்..

அதே போன்று நாம் பேச்சு வழக்கில் சொல்லும் வார்த்தை பொம்பிளை பசங்க..

உதாரணமாக அந்த கல்லூரி பொம்பிளை பசங்க ரொம்ப நல்லவங்க என்கிறார் ஒருவர் ...

இந்த வார்த்தையை நன்றாக கவனியுங்கள் பொம்பிள்ளை பசங்க.

பெண்பிள்ளை பையன்கள் இது தான் உண்மையான தமிழ்.

பெண்களை குறிக்க கூட ஆண் இருபாலர் சொற்களும் கலந்து இருக்கும்.

பெண்+பிள்ளை +பசங்க : பொம்பிளை பசங்க.

இது பண்டைய இலக்கியத்தில் உள்ளது.

பெண்மை யடுத்த மகனென் கிளவியும்

என்று தொல்காப்பியம் கூறுகிறது ...

இப்படி அழித்து கூட்டி குறைத்து இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழையும் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் சில பயித்தியக்கார அரசியல் வாதிகளுக்கு வருவது இயல்பே...

காரணம் வரலாற்றில் தமிழை எவர்கள் அழித்தார்கள் என்பது தெளிவாகவே உள்ளது.

தமிழக இலக்கியங்களை திருடி சமஸ்கிரதமாக மாற்றிக் கொண்டு தமிழ் கையெழுத்து பிரதிகளை திருடியது தெரியக்கூடாது என்பதற்க்காகவே கொண்டு வந்த ஒரு பண்டிகை தான் ஹோலி பண்டிகை..

இதில் நம்மவர்களது பல ஆயிர கையெழுத்து பிரதிகள் சமஸ்கிரத்துக்கு காப்பி அடித்த பிறகு கொழுத்த பட்டது ...

ஹிந்தி நல்ல மொழி,

ஹிந்தியை கற்றுக்கொள்வதால் நமக்கு நல்லது என்றாலும் கூட தாய் மொழியை விட ஹிந்திக்கு தான் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற கோட்பாடு முட்டாள் தனமானது.

நாம் சாதாரணமாக ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரம் என்று மட்டுமே பார்க்கிறோமே தவிர அன்றைய காலத்தில் ஹிந்தியை எந்த அளவிற்கு இவர்கள் தூக்கி பிடித்தார்கள் என்பதை நம்மில் பலரும் அறிய வாய்ப்பில்லை..

சரி இப்பொழுது தமிழ் தான் நன்றாக உள்ளதே ஹிந்தியை கற்றுக்கொள்ள என்ன பிரச்சனை என்று யோசித்தால்.

தமிழ் நன்றாக உள்ளது என்று யார் சொன்னது ?

இதற்கு உதாரணம் மேலே கூறிவிட்டேன் நம் முன்னோர்கள் இப்பொழுது வந்து நம்மிடம் பேசினால் ஒன்றுமே புரியாது..

இன்னும் பாருங்கள்..

சுவர் என்பது தான் தமிழ் சொல்
சுவற்றில் நோட்டீஸ் ஓட்டாதீர்கள் என்பதை நாம் காணுகிறோம் ஆனால் அது தவறு.

சுவறில் நோட்டீஸ் ஒட்டாதீர்கள் என்பதே சரி.

வயிற்று வலி என்பது தவறு
வயிறு வலி என்பது சரி.

பழச்சாறு என்பது தவறு
பழசாறு என்பது தான் சரி.

கயிற்றை எடு என்பது தவறு
கயிறை எடு என்பது தான் சரி.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

ஈயல் = ஈசல்
பையன்கள் =பசங்கள்
இயை= இசை
யாமம் = சாமம்

இதெல்லாம் விட

தமிழ்நாடு அரசு என்பதே பிழை தான்..

தமிழ் நாட்டரசு என்பது தான் சரி..

தமிழ் நாடு அரசு என்பதற்கான அர்த்தம் தமிழை நாடும் அரசு என்பதாகவே பொருள் படும்...

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இப்படி அழிந்து கொண்டு இருக்கும் தமிழை ஒட்டுமொத்தமாக அழிக்க இந்த அரசியல் வியாதிகள் முயல்வது கால கொடுமை...

அவர்கள் அவர்களுக்கு கலாச்சாரம், மொழி, பண்பாடு, எல்லாமும் அவர்கள் உரிமை இதில்  தலையிட எந்த அரசுகளுக்கும் உரிமை இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.