21/06/2017

குடும்பத்தோடு மது குடிக்கிறார்களா ராணுவ வீரர்கள்...


எங்களுக்கு மலிவு விலையில் சாராயம் வேண்டும் ஈரோட்டில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னால் ராணுவ வீரர்கள்.. பெண்களும் பங்கேற்பு...

முன்னால் ராணுவ வீரர்களுக்கென பிரத்யேகமாக உள்ள மலிவு விலைக் கடையில் உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சாராய விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் எங்களுக்கு மலிவு விலையில் சாராயம் வேண்டும் எனவும் முன்னால் ராணுவ வீரர்கள் ஈரோட்டில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.

நாட்டை காக்கும் ராணுவ வீரர்களை அரசே மலிவு விலையில் மதுவை கொடுத்து மழுங்கச் செய்து மது அடிமைகளாக்கினால் நாட்டின் பாதுகாப்பு என்னாவது ? அதன் விளைவாகத்தான் இவர்கள் இப்படி போராடுகின்றார்களா என மதுவிற்கு எதிராக போராடுபவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.