21/06/2017

ஆம்புலன்ஸ் செல்வதற்காக நாட்டின் ஜனாதிபதி காரை நிறுத்திய போக்குவரத்து காவல் எஸ் ஐ நிஜலிங்கப்பா, குவியும் பாராட்டுக்கள்...



பெங்களுர் மெட்ரோ சேவையை திறந்து வைத்து விட்டு தனது மாளிகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, அவர் செல்வதற்காக ட்ரினிட்டி பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதில் ஒரு ஆம்புலன் செல்ல முடியாமல் தவித்து நின்றுள்ளது.

இதை பார்த்த போக்குவரத்து காவல் எஸ் ஐ நிஜலிங்கப்பா ஜனாதிபதி காரை நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி செய்தார்.

நிஜலிங்கப்பா இந்த மனித நேயச் செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

பொதுமக்கள் என்றில்லாம் சக போலிஸ் உயர் அதிகாரிகளே லிங்கப்பாவை பாராட்டி ட்வீட் செய்து அவருக்கு இதற்காக விருது கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.