31/07/2017

திருட்டு திராவிடர்ஸ்...


நான் : தமிழர் கழகம் என்று வைக்காமல் ஏன் திராவிடர் கழகம் என்று வைத்தார்?

திராவிடர் : தமிழர் கழகம் என்று வைத்தால் பார்ப்பான் உள்ளே வந்து விடுவான், அதனால் திராவிடர் கழகம் என்று வைத்தார்,

நான் : அப்ப கன்னடன், தெலுங்கன், மலையாளி உள்ளே வந்தால் பரவாயில்லையா என்றேன்,

திராவிடர் : நீ இனவெறிப் பிடித்து அலைகிறாய் என்றுவிட்டு கிளம்பிட்டார்,

இது போன மாதம்...

நான் : மேலே கேட்ட அதேக்கேள்வியை அப்படியே கேட்டேன்,

திராவிடர் : அன்றைய சென்னை மாகாணத்தில் கன்னடர், தெலுங்கர், மலையாளி, தமிழர்கள் என அனைவரும் ஒன்றாக இருந்தனர், அதனால் திராவிடர் கழகம் என்று வைத்தார்,

நான் : சரி அன்றைய சென்னை மாகாணத்தில் வசித்த மற்ற மொழியினருக்கு தமிழ் தெரியுமா என்று வினவினேன்,

திராவிடர் : மொழி பிரச்சனையில்லை, மொழி ஒரு கருத்து பரிமாற்றக் கருவியே தவிர வேறொன்றுக்கும் பயனில்லை என்றார்,

நான் : சரி மொழி கருத்து பரிமாற்றத்திர்க்கு மட்டுமே பயன்படுவதாக வைத்துக் கொள்வோம், மற்ற மொழியினருக்கு எவ்வாறு கருத்தை பரிமாற்றம் செய்தார் உங்க ஆசான்,

அவர்கள் மொழியில் கருத்தை பரிமாற்றம் செய்ய ஏதாவது ஏடுகள் வெளியிட்டாரா?

(உ.தா: விடுதலை, குடியரசு போன்று) என்றுக் கேட்டேன்..

திராவிடர் : நீ மொழிவெறிப் பிடித்து அலைகிறாய் என்றுவிட்டு கிளம்பிட்டார்,

இது இந்த மாதம்...

இந்த பிழைப்புக்கு மரத்தில் நாண்டுக்கிட்டு சாகுங்கடா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.