23/07/2017

எடப்பாடி பழனிச்சாமி: டெல்லியில் விவசாயிகள் போராடுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம்...


எம்.எல்.ஏ. ஆறுகுட்டி தங்கள் அணிக்கு வந்தால் வரவேற்போம் என்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கமல்ஹாசன் ஒரு நடிகர் என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் அவருக்கு தக்க பதில் கொடுப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விவசாயக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராடுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்த முதலமைச்சர், அதிமுக என்றைக்கும் ஒரே அணி தான் என்றும், எங்களுக்குள் பிளவி இல்லை என்றும் தெரிவித்தார்.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.