23/07/2017

கமல்ஹாசனின் தீடீர் அரசியல்.. உத்தம வில்லன்...


திரைப்படங்கள் மூலம் சாதி , மத பேதங்களை முன்னிலைப்படுத்தி பலவித சர்ச்சைகள் ஏற்படுத்தி அமோக வசூல் செய்தவர்களில் முதன்மையானவர் கமல்ஹாசன்.

தேவர் மகன் பட தலைப்பு கொடுத்து படம் எடுத்த கமல்ஹாசன் தலித்துகளை கொந்தளிக்க விட்டுவிட்டு படத்தின் முழு கதை கருவையும் தேவர் இன மக்களுக்கு எதிராக  கொடூரமானவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டு அமைதியின்மையால் சாதிய வெறியர்களை உருவாக்குபவர்கள் என்கிற புது தத்துவத்தை தமிழகத்திற்கு முன்மொழிந்தவர்.

தேவர் மகன் போல பல படங்களை உதாரணத்திற்கு சொல்லலாம்...

அதே போன்று இஸ்லாமியர்களுக்கு எதிராக உன்னை போல் ஒருவன், விஸ்வரூபம் போன்ற படங்கள் மூலம் மத கலவரங்களை ஏற்படுத்த முயன்றவர்.

விஸ்வரூபம் மூலம் இஸ்லாமியர்களை கலாச்சார தீவிரவாதிகள் என்ற பட்டம் கொடுத்த உலக மகா நடிகன்.

இப்படி மத சாதிய கொள்கை முன்னிறுத்தி படம் எடுத்து கலாச்சார சீர்கேடுகளை தமிழகத்தில் விதைத்தவர்.

அடிக்கடி இவர் சொல்லும் தத்துவம் நானும் பெரியாரின் கொள்கை பின்பற்றுபவன் என்கிற போலி வேதாந்தம்..

சரி பெரியாரின் கொள்கை பின்பற்றும் நபராக கமல்ஹாசன் இருந்தால் ஆர் எஸ் எஸ் பாசிச சிந்தனைக்கு எதிராக ஏன் படம் எடுக்கவில்லை?

இதுவரை இவரின் படம் வெளிவர சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுக்கவில்லையா ?

இவர் எடுக்கும் படத்தின் மூலம் வரும் வருமானத்தை திருட்டு கணக்கு காட்டாமல் உண்மையான வருமான வரி செலுத்தி உள்ளாரா ?

கமல்ஹாசனின் நற்பணி மன்ற அகில உலக தலைவராக இருந்த குணா என்கிற குணசீலன் தன் வாழ்க்கையே அர்ப்பணித்தவருக்கு நீங்கள் என்ன சம்பலம் வழங்கி கெளரவித்தீர்கள்?

பார்பனியத்தை உயர்த்தி பிடித்து படமெடுத்து பணம் சம்பாதிக்கும் கமல்ஹாசன் ஊழல் பற்றி பேசுவதே வேடிக்கை...

இப்படி பல டஜன் கேள்விகள் உள்ளன.

அதிமுக ஆட்சியின் மீது உள்ள வெறுப்பை கலாச்சார சீர்கேட்டு நாயகனிடம் மண்டியிடுவது எப்படி என்றால் காங்கிரஸ் ஆட்சி மீது இருந்த வெறுப்பை அன்னா ஹசாரே முன் மண்டியிட்டு பாசிச பிஜேபி ஆட்சிக்கு உதவியது போல் ஆக கூடாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.