25/08/2017

தமிழனுக்கு தெரிந்தது திராவிட மற்றும் தேசிய கட்சியில் இனைந்து தன் இனத்திற்கு துரோகம் செய்வது மட்டுமே...


கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது.....

மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது......

முதல் சுதந்திர போராட்ட வீரன் புலித்தேவனை தெரியாது.....

முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை தெரியாது....

குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மரு திருவரை தெரியாது....

முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது.....

டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனை தெரியாது.....

ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது.....

ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்ட பிரமச்சாரியை தெரியாது...

ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சியை தெரியாது....

வெள்ளையனை எதிர்த்து வணிகம் செய்த ஒரே சுதந்திர போராட்ட தியாகி சிதம்பரனார் தெரியாது.....

இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே. இவர்களை போல இன்னும் பல லட்சக் கணக்கான பெயர்கள் உள்ளன.

அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரியபடாமல் வைத்து வரலாற்றை அழிப்பதே இன்றைய கட்சிகள் செய்த சாதனை..

உங்களை போலவே உங்கள் தலைமுறைகளுக்கும் நம் தமிழனின் வரலாற்றை சொல்லிக்கொடுக்க தயங்கி வரலாற்றை அழித்து விடுங்கள் இதுவே நீங்கள் செய்யும் சாதனையாக இருக்கட்டும்..

50ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய எம் தமிழ் மொழியை இந்த 50 வருடங்களில் அழித்த பெருமை நம்மையே சேரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.