12/08/2017

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது...


சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மிதமான வானிலை நிலவியது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. குமரி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நாகர்கோவில், வடசேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.

தென்மாவட்ட கடலில் சூறை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.