23/10/2017

திரு.பிரணாய் ராய் பரபரப்பு பேட்டி தந்தி போன்ற ஊடகத்தின் பதில் என்ன..?


இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளரும், என்டிடிவி யின் நிறுவனர்களில் ஒருவருமான திரு.பிரணாய் ராய் இன்று அளித்துள்ள பேட்டி ஒன்றில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக கையாண்டு வரும் குறுக்கு வழிகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தன் கண்ணசைவில் இயக்கி வரும் மோடி மற்றும் அமித்ஷா குழுவினர், பாராளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் நடிகர் ரஜினியை அரசியலில் இறக்கி விட்டு ஆதாயம் தேடும் முயற்சியில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றுள்ளதாகவும், அதற்கு தமிழகத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் முக்கிய பிரமுகர் ஒருவர் பேருதவி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பாஜக வை ப்ரமோஷன் செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், தன் பேட்டியின் முடிவில் அந்த தமிழ்நாட்டு ஊடகம், தமிழகத்தில் மிக பிரபலமாக இருக்கும் 'தந்தி டிவி' என்றும் அதன் முதன்மை செய்தி் ஆசிரியர் திரு.ரங்கராஜ் பாண்டே வை இதற்கென்றே கோடிகளில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் விவரிக்கிறார்.

பாஜக, ரஜினி, அதிமுக ஒன்றிணைந்த அணியை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சென்று சேர்ப்பதிலும், அவர்களுக்கு ஆதரவான செய்திகளை தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பலம் பெறச் செய்வதுமே இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை. இது கூட ஒரு விதத்தில் பாஜக செய்யும் ஊழல் தான் என்று சொல்கிறார்.
                                                                                                                                                            மேலும், இந்த பதிவில் ரஜினி பெயர் இருக்கும் இடத்தில் கமல் பெயரையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.