23/10/2017

நடிகர் சங்க தலைவர் விஷால் அலுவலகத்தில் ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்...


சென்னை வடபழனியில் விஷாலுக்கு சொந்தமான சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளது.

அந்த அலுவலகத்தில் மத்திய கலால் வரித்துறை கீழ் உள்ள ஜிஎஸ்டி கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் வந்தனர்.

சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அங்கு சோதனை நடைபெற்றது.
இந்த திடீர் சோதனையின் போது விஷாலும், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளரும் அங்கு இல்லை.  இருந்த போதும், நிறுவனத்தில் இருந்தவர்கள் அதிகாரிகள் கேட்ட அனைத்து தகவல்கள், ஆவணங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு தந்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக மற்றும் மத்திய அரசை விஷால் தொடர்ந்து விமர்சித்து வருவதால் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாக நடிகர் கருணாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மெர்சல் விவகாரத்தில் பாஜக தலைவர் மீது விஷால் வைத்த விமர்சனங்களால் இந்த சோதனை நடைபெறுவதாக பரபரப்பாக பேசப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.