22/10/2017

தமிழர் வேடத்தில் நடிக்கும் `இந்தி’ நடிகர் ராஜா சர்மாவும்.. மெர்சலும்...


ஒண்ட வந்த பிடாரி.. ஊர் பிடாரியை விரட்டிச்சாம் னு கிராமத்துல ஒரு பழமொழி சொல்வாங்க..

நாமெல்லாம் நடப்பு அரசியலை பேசிக்கொண்டிருக்கும்போது.. முப்பது ஆண்டுகளுக்குப் பின் வரும் அரசியலுக்கான வேலைகளை செய்வதுதான் டவுசர்களின் மூளை.

இதற்கென பெரும் பொளுதாரா உதவிகளும்.. மண்டை வீங்கிகளின் குழுக்களும் அவர்களிடையே உண்டு. இந்த குழுக்கள் வெளியே தெரியாது.

இந்த குழுக்கள் தான் ராமன் இங்குதான் பிறந்தான் என்று மீண்டும் மீண்டும் ஒப்பாரி வைத்து மசூதியை இடிக்க ஸ்கெட்ச் போட்டு கொடுப்பார்கள்..

இப்போது தாஜ்மஹாலை குறி வைத்து ஒப்பாரி எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.. ஏதேனும் ஒரு நாள் இரவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

அப்படி  சில பல ஆண்டுகளுக்கு முன் டவுசர்களின் மண்டை வீங்கி குழுக்களின் திட்டப்படி தமிழகத்திற்குள் இந்தி சொல்லிக்கொடுப்பதுபோல் நுழைந்தவர்தான் ஹரிஹர சர்மா  என்ற வட இந்தியர்  என்கிறது   வரலாறு.

இந்த சர்மா என்பது வட இந்தியாவில் கோவில்களில் மணியாட்டுபவர்களின்  சாதிப்பெயர்.

தமிழர்களிடம் இந்தியின் பருப்பு வேகாது என்று தெரிந்ததும் தமிழர்களின் தோற்றத்திற்கு சர்மா அண்ட் கம்பெனி மாறுகிறது.

அதன்படி முழுக்க மகன் ராஜாவை தமிழர் தோற்றத்திற்கு தயார் படுத்துகிறார்.

அப்படி வேட்டி கட்டி தோற்றத்தில் தமிழர் போல் நடிகனாக அவதாரம் எடுத்தவர் தான் ஹரிஹர சர்மாவின் மகன் எச்.ராஜா. அப்போ தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவும்..? என்ற கேள்வி இந்த இடத்தில் உங்களுக்கு எழுந்தால் கம்பெனி பொறுப்பாகாது..

முப்பது ஆண்டுகளுக்கு பிந்தைய அரசியலுக்கான வேலையை மெல்ல மெல்ல ஆரம்பிப்பார்கள் என்று ஏற்கனவே சொன்னதுபோல் தமிழகத்தில் செல்லாகாசாக.. யார் எவர் என்றே தெரியாமல் இருந்த பாஜகவினர் ஊடகங்களில் கெஞ்சி கூத்தாடி தலை காட்டுகிறார்கள்.

அப்போதைய புதிய தலைமுறை நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் கேட்டால் பல கதைகள் சொல்வார்கள்.

அப்படி வெறுமனே ஊடகங்களில் முகம் காட்டியே டெல்லியின் பார்வைப்பட்டு பதவிகளை பெற்றவர்கள் தான் தமிழிசை வானதி சீனிவாசன் எச்.ராஜா போன்றவர்கள்.

மற்றபடி இவர்கள் தேர்தலை சந்தித்தால், சாரணர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு ராஜாவின் டவுசர் கழண்டதுபோல் தான் வாக்கு வங்கி செல்வாக்கு உண்டு.

சரி.. இப்போது இவ்வளவு கதையும் எதற்கு சொல்ல வந்தேன் என்றால்..

தமிழர் போல் காட்டிக்கொள்ள வேட்டிக்கட்டிய இந்த இந்தி நடிகர் எச் ராஜா, தமிழரான விஜயை, ஜோசப் விஜய் என்று அடையாளப்படுத்துகிறார்.

இப்படி அடையாளப்படுத்துவதற்கு பின் ஒளிந்திருப்பதுதான் நரி தந்திரம்.

மெர்சல் படத்தின் ஜிஎஸ்டி விமர்சனம் என்பது விஜய் கிறிஸ்த்தவர் என்பதால் தான் வைக்கப்பட்டிருக்கிறது என்று பொது தளத்தில் திருப்பிவிட வேண்டும் என்பதற்காகதான் ஜோசப் விஜய் என்று அழுத்தம் கொடுக்கிறார்.

நாம் இந்துக்கள் என்று நுழைந்து மத ரீதியான மோதலையும் வெறுப்பையும் மக்களிடம் உருவாக்கி வளர்வதுதான் டவுசர்களின் தந்திரம். தமிழகத்திலும் அதை செய்ய அடிபோடுகிறார்கள்.

அவர்களுக்கு தமிழர்கள் நாங்கள் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்...

விஜய்,

ஜோசப் விஜயாக இருந்தாலும் சரி..
முகமது விஜயாக இருந்தாலும் சரி..
முருகன் விஜயாக இருந்தாலும் சரி..

விஜய் இந்த மண்ணின் பிள்ளை.. தமிழர்களின் பிள்ளை..

ஆனால் இந்த மண்ணுக்கு  நீங்கள் யார் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா மிஸ்டர் ராஜா சர்மா..

-கார்ட்டூனிஸ்ட் பாலா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.