13/11/2017

குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி, ஆட்டோக்கள் மீது மோதியதில் ஆட்டோ டிரைவர் பலி, 20 பேர் காயம், குடிகார இளைஞரை பாதுகாத்த போலீஸ்...


சென்னை, தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில், ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களை சொகுசு கார் இடித்து நொறுக்கியது.

இந்த விபத்தில் ராஜேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

மேலும், பல ஆட்டோக்கள் நொறுங்கிய நிலையில், படுகாயமடைந்த நான்கு பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, இந்த விபத்தை ஏற்படுத்திய இளைஞரின் புகைப்படம் சிக்கியுள்ளது. காரை தாறுமாறாக ஓட்டிய இந்த இளைஞர் குடி போதையில் இருந்துள்ளார்.


சனிக்கிழமை இரவு பார்ட்டியை முடித்து விட்டு தனது நான்கு நண்பர்களுடன் அதிவேகத்தில் காரை ஓட்டி வந்துள்ளார் இவர். விபத்து நடந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இந்த இளைஞரையும், உடன் வந்த நண்பர்களையும் பாதுகாப்பாக அழைத்து சென்றிருக்கின்றனர்.

காவல்துறை காசுள்ளவனுக்கு நண்பன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.