13/11/2017

திருச்சி மாவட்டத்தில் முதல்முறையாக, திருநங்கை ஒருவருக்கு தற்காலிக ஜீப் ஓட்டுநர் பணியை வழங்கிய மாவட்ட நிர்வாகம்...


திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம், பாத்திமாநகரை சேர்ந்தவர், திருநங்கை சினேகா, இவருக்கு மாவட்ட வழங்கல் மற்றும் மற்றும் விற்பனை சங்கத்தில் தற்காலிக, ஓட்டுநர் பணி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சினேகாவுக்கு ஓட்டுநருக்கான பணி நியமன ஆணையை ஆட்சியர் கு.ராஜாமணி வழங்கினார்.

இதுகுறித்து திருநங்கை சினேகா கூறியதாவது, அலுவலகத்தில் பணிபுரியும், சக உழியர்கள் தன்னிடம் மிகுந்த அன்பு காட்டுவதாகவும், தனக்கு கிடைத்ததுப்போல அனைத்து திருநங்கைகளுக்கும் வாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.