13/11/2017

ஆட்டோ ஓட்டுநர்கள் அபார சேவை, பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து அசத்தினர்...


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆட்டோ ஓடடுநர்கள் ஒன்றிணைந்து பேருந்து நிலைய பகுதியில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா எடுத்து வரும் பல அதிரடிகள் மூலம் மாவட்டம் முழுவதும் தூய்மை பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஊட்டி மத்திய பேருந்து நிலைய பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர் சண்முகம் மற்றும் செயலாளர் ஜாபீர் தலைமையில் சுமார் நூறு ஆட்டோ ஓட்டுனர்கள் இணைந்து பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி மண் மூடி கிடந்த கால்வாய்களை எந்த வித முக சுளிப்பும் இன்றி கால்வாயில் இறங்கி முழுவதுமாக மண்களை அகற்றி தூய்மைப்படுத்தினர்.

ஆட்டோ ஓட்டுநர் அடாவடிகாரன் என்ற தவறான கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றிக்காட்டிய ஊட்டி ஆட்டோ  ஓட்டுநர்களுக்கு வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.