03/11/2017

மெர்சலுக்கு காட்டிய எதிர்ப்பு ஏன் இங்கு காட்டவில்லை ? பாஜக தமிழிசையிடம் கேள்வி கேட்ட பாலிமர் செய்தியாளரை பகிரங்கமாக மிரட்டி அடிக்கப் பாய்ந்த பாஜக வினர்...


சென்னை கொடுங்கையுரில் சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து கேள்வி கேட்ட பாலிமர் செய்தியாளரை  பாஜகவினர் அனைவரின் முன்னிலையிலும் மிரட்டி அடிக்க பாய்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகாவை சீண்டுவோர் நிம்மிதியாக இருக்க முடியாது என சில நாட்களுக்கு முன்னர் ஹெச் ராஜா பேசியிருந்த நிலையில் கேள்வி கேட்ட செய்தியாளரையே பாஜகவினர் தாக்க முயன்றுள்ளது குறிப்பிடதக்கது.

இறுதியில் சக செய்தியாளர்கள், அந்த பகுதி மக்கள் மற்றும் போலிசார் செய்தியாளரை மீட்டனர். தங்கள் கட்சி தலைவியிடம் கேள்வி கேட்டது பிடிக்கவில்லை எனில் அதை நாகரீகமான முறையில் தெரிவித்துக் இருக்கலாம் இறங்கல் வீட்டிற்கு வந்திருக்கின்றோம் என்று கூட பார்க்காமல் அங்கேயும் பாஜகவினர் பிரச்சனை செய்தது பாஜகவினர் என்ன மாறியான அரசியலை தமிழகத்தில் கொண்டு வரப் பார்க்கின்றார்கள் என அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.