09/12/2017

தீர்க்க தரிசனம் : இரண்டாம் வருகை இயேசு தான் எழும்புவதற்கு முன் அவரிடத்தில் காணும் இறுதிக் காட்சி எது.?

இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல... சிந்திக்க மட்டுமே...


எழுதப்பட்ட அத்தனை தீர்க்க தரிசனங்களும் பூமியில் இருக்கும் இரண்டாம் வருகை இயேசுவை சார்ந்த விஷயங்கள் என்பதை எல்லாத் தீர்க்க தரிசனங்களும் சுட்டிக் காட்டுகின்றன குரானும் இதற்கே குரல் கொடுத்து நிற்கிறது..

இப்படி இறுதிக்கட்ட காட்சிகள் அனைத்தும் இரண்டாம் கட்ட வருகை கொண்டு நிற்கும்  இயேசுவிற்கும் அவர்தம் குடும்பத்திற்கும், அவரது திருச்சபைக்கும் சார்ந்த  விஷயங்கள் ஆகும்.

இப்படியிருக்க அவரை மையமாய் வைத்து அவருடைய திருச்சபையை மையமாய் வைத்து சொல்லப்படும் அத்தனை தீர்க்க தரிசனங்களும் உலகின் அவ்வப்போது உள்ள காட்சிகளோடு சம்மந்தப்பட்டு நிற்கிறது.

இப்படிப்பட்ட போகர் எனும் இரண்டாம் வருகை இயேசு பூமியிலே வந்து நிற்கும் காலம் அவர் திருச்சபையை ஆட்கொண்ட காலம் இறைவனோடு கூடிய காலமாக இருக்க வேண்டும்.

அப்படி பார்த்தால் சித்தர்களின் தீர்க்கதரிசன கருத்துப்படி காலஓட்டம் அதிவேக ஓட்டமாக ஓட ஆரம்பித்தது 1990-91.

அதிநவீன விஞ்ஞானமையம் உலகை பற்றிக்கொண்டு பொருள்கள் மனிதனை ஆட்டிவைக்கும் காலம் ஏற்பட்டது இந்த காலத்திலிருந்து தான்.

எனவே 1990-91முதல் இறைவனும்  இறையாளர் இரண்டாம் வருகை இயேசுவும்  பூமியில் தம் பணிகளை செவ்வனே துவக்க ஆரம்பித்திருக்க வேண்டும்..

2000த்துக்கு பிறகு இயற்கை சீற்றங்களும் பூகம்பங்களும் பூமியை ஒருவழி பண்ணிக் கொண்டிருக்கின்றன. வரவர இத்தன்மை பூமியிலே அதிகரித்து கொண்டு போகும் போதே இது இறைவனும் இறுதி போகரும் பூமியில் இருக்கிறார்கள் என உறுதிப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.

அந்த திருச்சபை வழிபாட்டையும் அதிகரித்திருக்க வேண்டும். அத்தோடு இந்து புராணத்தில் எடுத்துச் சொல்லப்பட்ட பிரதோஷ வழிபாடு இக்காலத்தில் தான் தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம், சந்து பொந்தெல்லாம் நந்தியை வைத்து நாடறிய வைத்தார்கள் பிரதோஷ வழிபாடு என்று.

20, 25 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்காவது பிரதோஷ வழிபாடு என்றால் தெரியுமா?அதை ஆலையங்களிலே செய்தது உண்டா?

ஆயிரத்தில் ஒருவர் தெரிந்திருக்கலாம் அதுவும் தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.

இன்று பிரதோஷ வழிபாடு அறியாதவர், தெரியாதவர், புரியாதவர், உண்டென்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.

தினப்பிரதோஷம், வாரப்பிரதோஷம், திதிப்பிரதோஷம்,  சனிப்பிரதோஷம், வளர்பிறைப்பிரதோஷம், தேய்பிறைப்பிரதோஷம் என்றெல்லாம் சொல்லி இறுதியில் கொண்டு நிறுத்துவது பிரளயகாலப் பிரதோஷ வழிபாடு, சைவ சித்தாந்திலே பசு பதி பாசம் என்று இறுதிக்கட்ட இறைவனின் காட்சியை சிறப்பிக்கும் நூல்  விளக்கமாக இதை பேசுகிறது.

நந்தியையும்  சிவனையும்  பிரிக்க முடியாது என்றும் நந்தியின் தலையிலேறி நர்த்தனம் ஆடுவார் இறைவன் என்ற காட்சியை சொல்லும் போது இறைவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டது இறையாளனாகிய நந்தியே.

ஆனால் இந்த பிரதோஷ வழிப்பாட்டை பிரளயகால பிரதோஷ வழிபாடு என சொன்னதற்கு காரணமே பிரதோஷ வழிபாடு என்று நாட்டில் பிரபல்யமாக வருகிறதோ உலகம் தன் முடிவை காணும் நேரம் வந்தது என்று பொருள்.

இறுதிக்கட்ட காட்சிகள் அரங்கேற வேண்டும் அதனால் பூமியில் பிரளயம் தவிர்க்க முடியாதது ஆகிறது.

அதனால் தான் மக்கள் மனமும் பிரதோஷ காலத்தில் அதி தீவரமாக கூட்டம் கூட்டமாக பிரதோஷ பூஜையை செய்து காலக்கணக்கை கட்சிதமாய் நிறைவேற்றி வைப்பார்கள்.

இப்படி ஒவ்வொரு மதமும் உலகத்தின் இறுதிக் காட்சிக்கு மக்களை அழைத்து சென்றாலும்,  இறுதி நேரம் நெருங்குகின்ற போது அறியும் காட்சி ஆனந்தத்தைக் கொடுக்கும்.

அது என்னவென்றால் எந்த மதத்தையும் சேராதவராக தனித்தன்மையில் தான் எழும்பி இறையாளருடன் இரண்டாம் வருகை இயேசுவுடன் சேர்ந்து திரித்துவ அமைப்பிலே உலகாண்டு நிற்கும் போது ஏகாதிபத்திய இறை கொள்கையையும் எல்லாம் வல்லவர் ஆண்டவர் என்பதையும் அனைத்தும் அவர்க்கே உரியன என்பதையும் உலகம் கண்டு கொள்ளும்.

சாதரணமாக பைபிளிலும் சரி மறுமை பற்றிய விஷயங்களை அலசும் போது குரானிலும் சரி தீர்க்கமாக விவரமாக தெளிவான பதிலை பெற முடியாமலும் புரிந்துக் கொள்ள  முடியாமலும் போனதற்குக்  காரணம் அனைத்து மத மார்க்க வேத நூல்கள் இறுதியில் வருபவர்க்கும் அவர்சபைக்கும் அந்நியபட்டு நிற்பதால்தான்.

இறுதிகால தீர்க்கதரிசனங்களில் உதாரணமாய் யோவானின் திருவெளிப்பாடு நூலை பலர் போதிக்க செல்வதே இல்லை. அப்படி மீறி செல்பவர்களும் நுனிப்புல் மேய்ந்து விட்டு திரும்புபவர்களாகத்தான் இருக்கிறார்கள், அவர்கள் பேரில் தவரொன்றுமில்லை.

இறுதிச் சபைக்குரிய விஷயத்தை இரண்டாம் வருகை இயேவை தவிர அவருடைய தூதர்களாகிய சீடர்களைத் தவிர, சபையாளர்களை தவிர வேறுயாரும் அவ்வளவு எளிதாக புரிந்துக் கொள்ள முடியாது. திரும்ப திரும்ப ஆராய்ந்து பார்த்தால்தான் அதனை நெருங்க முடியும்.

இப்படி பார்க்கின்ற பொழுது செவன்த்டே அட்வென்டிஷ்ட் மே2011-ல் வெளியிட்ட வானத்தை நோக்கிபார் என்ற சிறிய புத்தகம் என் கண்ணில்பட்டது. அதை பார்க்க முற்பட்டப்போது  இயேசுவின்  சபையில் உள்ள இறுதி செய்தியாக ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் அறிவிக்கப்படுதலை வெளி (14: 6-12) (18: 1-24) சொல்லப்பட்டிருந்தது.

அந்த புத்தகத்தில் தானியேல் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தை வருட கணக்கில் மாற்றி செய்திருந்த பெரும்பிழையைக் கண்டேன்.

அதைப்பற்றி ஏற்கனவே உங்களுக்கு சொல்லிவிட்டதாலும் தானியேலை விடுத்து இரண்டாம் வருகை இயேசுவின் இறுதிகட்ட காட்சிற்கு வருவோம்.

எல்லா தீர்க்கதரிசனங்களும் ஒரு சேர நடந்து முடிந்தாலும் இயேசு இறுதி நேரத்திலே தன்னுடைய திருச்சபையிலே தன்னுடைய பதியிலே இறைவனை மிகுந்த உபத்திரவத்திலிருந்து கொண்டு ஆராதித்து கொண்டிருக்கும்போது அவர் தன்னுடைய சபை சுவிசேஷதத்தை உலகம் முழுவதும் சென்றடைய மூன்றே மூன்று தூதர்களை பயன்படுத்துகிறார்.

ராஜ்ஜிய சுவிசேஷம் உலகமக்கள் அறியும்படி படிக்கும்படி இறுதிக்கட்ட காட்சியின் ரகசியங்களை தன் மூன்றே சீடர்கள் மூலமாக உலகம் முழுவதும் சென்றடைவதற்கான வழியைச் செய்கிறார்  அப்போது உலகத்தின் முடிவு வருகிறது.

இதனை திண்ணமாய் கோடிட்டு திருவெளிப்பாடு யோவானின் தீர்க்கதரிசனத்திலே குறிப்பிட்டிருப்பதை பாருங்கள், இதையே தமிழ் தீர்க்கதரசிகளும் தங்களுடைய தீர்க்கதரிசனங்களிலே இறுதி சபைக்காக வரும் போகர் தன் சீடர் மூவரைக் கொண்டு இறுதிகட்ட கால ரகசியங்களை உலகம் முழுவதும் சென்றடைய வழிவகைச் செய்கிறார் என குறிப்பிட்டதிலிருந்து தமிழ்சித்தர்களின் கருத்துக்கள் யோவானின் தீர்க்கதரிசனத்தோடு ஒத்துப்போய் இருப்பதை பார்க்கின்றபோது மிகவும் வியப்பாய் இருக்கிறது.

இப்படி போகர் கூறும்போது இந்த மூன்று பேரைத் தவிர வேற எந்த திருச்சபைகளிலும், பின்பற்றும் ஆயிரக்கணக்கானோர் எவரும் இதை பரப்பவில்லை. உலகம் அறியும்படி செய்யவில்லை என்று குறிப்பிடுவதை பார்த்தால் யோவானும் மூன்று தூதரே இவ்வேலையை செய்கிறார்கள் என்று  கூறுகிறார்.

இதை பார்த்தால் மூன்று தூதரும் உலக முழுவதும் பிரயாணப்பட்டு போதிக்கச் சாத்தியமில்லை அப்படியென்றால் சாத்தியபடும் ஒரே வழி இன்றைய போக்கில் நாம் யூகித்து பார்த்தால் வலைத்தளமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் இந்த மூன்று தூதர்களாகிய சீடர்கள் உலகெங்கும் ராஜ்ஜிய சுவிசேஷத்தை  அறிவிப்பை அறிவித்து நிற்கும்போது உலகத்தின் முடிவு வரும், என்று சொல்லும் போது இறுதிச்சபையிலே எத்தனையோ அடையாளங்கள் எழுந்து வந்தாலும் இரண்டாம் வருகை இயேசு அல்லது போகருடைய சீடர்கள் மூவர் உலகெங்கும் தெரிவிக்கும் காட்சிதான் முடிவின் காட்சியாக இருக்கிறது.

இக்காட்சியை தீர்க்கதரிசி முத்துகுட்டி அவர்கள் இறுதி சபையில் காணும் காட்சிகளாய் எழுதுக்கின்ற போது இறையரசு எழுவதற்கும் உலகம் கடைநிலையை காணுவதற்கும் எழுதிய வார்த்தைகளை மனம் அசைபோட்டு பார்க்கிறது.

 "பொத்திய கைகளை சற்றே திறந்து விட்டால் பூலோகம் அழிந்துவிடும், ஊமைபோல் இருப்பதை வாயை திறந்து விட்டால் உலகம் அழிந்து விடும் "என்று இறுதிச்சபைக்கு சொல்லி நிற்கும் வார்த்தைகள் இக்கருத்துக்கு சுகம் சேர்த்து நிற்கிறது.

இப்படியிருக்க லட்சோபலட்சம் சபைகளை கொண்டவர்கள் சுவிசேஷ அறிவிப்பை உலகத்தில் செய்கிறோம் என்று செய்து நிற்பது தீர்க்க தரிசனத்திற்கு முரணான காட்சிகளே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.