09/12/2017

இசை மருத்துவம்...


இரவு தூங்க முடியாமல் எதேனும் வயிறு கோளாறு ஏற்பட்டு கைவசம் "antacid" ஏதும் இல்லாத பட்சத்தில் ஹிந்தோள ராக பாடலை பாடுங்கள்.

ராக ஆராய்ச்சியாளர்கள் இது நள்ளிரவில் பாட வேண்டிய ராகமென்றும், இந்த ராகத்தால் வாயுக்கோளாறு நீங்கும் என்றும் கூறுகின்றனர்.

இந்த ராகத்தில் வந்த திரைப்பட பாடல்களை பார்ப்போம்...

1. ராஜ சேகரா என் மேல்.. – அனார்க்கலி 1955; கண்டசாலா & ஜிக்கி –> இசை: ஆதிநாராயணராவ்.

2. அழைக்காதே சபைதனிலே.. – மணாளனே மங்கையின் பாக்கியம் 1955; பி.சுசீலா –> இசை: ஆதிநாராயணராவ்.

3. கண்களும் கவி பாடுதே.. – அடுத்த வீட்டுப் பெண் 1960; சீர்காழி கோவிந்தராஜன் & திருச்சி லோகநாதன்–> இசை: ஆதிநாராயணராவ்.

4. மழை கொடுக்கும் கொடையும்.. – கர்ணன் 1964; சீர்காழி கோவிந்தராஜன் –> இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.

5. மனமே முருகனின் மயில் வாகனம்.. – மோட்டார் சுந்தரம்பிள்ளை 1965; ராதா ஜெயலட்சுமி –>  இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.

6. பச்சை மாமலை போல் மேனி.. – திருமால் பெருமை 1966; சௌந்தரராஜன் –> இசை: கே.வீ.மகாதேவன்.

7. இயற்க்கை என்னும் இளைய கன்னி..n– சாந்திநிலையம் 1969; S.P.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா –>  இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

8. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.. – அவளுக்கேன்றோர் மனம் – எஸ்.ஜானகி –> இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

இளையராஜாவின் இசையில் ஹிந்தோளம் ராகத்தில் வந்த பாடல்கள் சில...

1. ஓம் நமச்சிவாயா.. – சலங்கை ஒலி – S.ஜானகி.

2. தரிசனம் கிடைக்காதா.. – அலைகள் ஓய்வதில்லை – S.ஜானகி.

3. தரிசனம் கிடைக்காதா.. – அலைகள் ஓய்வதில்லை – இளையராஜா & எஸ்.ஜானகி.

4. நான் தேடும் செவ்வந்திபூ இது.. – தர்மபத்தினி – S.ஜானகி, இளையராஜா.

5. பாட வந்ததோர் கானம்.. - இளமைக் காலங்கள் – கே.ஜே.யேசுதாஸ் & பி.சுசீலா.

6. ராகவனே ரமணா ரகு நாதா.. – இளமைக் காலங்கள் – பி.சுசீலா.

7. பூவரசம்பூ பூத்தாச்சு.. – கிழக்கே போகும் ரயில் – S.ஜானகி.

8. ஸ்ரீதேவி என் வாழ்வில்.. - இளமைக்கோலம் – கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.சைலஜா.

9. நானாக நானில்லை.. – தூங்காதே தம்பி தூங்காதே – இளையராஜா; (சரணத்தில் அனுசுரங்கள்).

10. ஆனந்தத் தேன்காற்று.. – மணிப்பூர் மாமியார் – இளையராஜா.

11. கண்ணா உன்னைத் தேடுகிறேன்.. – உனக்காகவே வாழ்கிறேன் – S.P.பாலசுப்பிரமணியம் & S.ஜானகி.

12. பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு.. - மண்வாசனை - SPB & S.ஜானகி.

13. உன்னால் முடியும் தம்பி தம்பி.. - உன்னால் முடியும் தம்பி தம்பி - SPB.

14. அழகுமலர் ஆட அபிநயங்கள் கூட.. – வைதேகி காத்திருந்தாள் 1985 – பாடியவர்: எஸ்.ஜானகி.

பிற இசையமைப்பாளர்களின் ஹிந்தோள ராகப்பாடல்கள்...

1. மல்லிகையே மல்லிகையே.. – நினைத்தேன் வந்தாய் – அனுராத ஸ்ரீராம் + சித்ரா –> இசை: தேவா.

2. உன்னை நினைத்தே.. – நினைத்தேன் வந்தாய் – எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா –> இசை: தேவா.

3. மார்கழி பூவே மார்கழி பூவே.. – மே மாதம் – இசை:- ஏ.ஆர்.ரகுமான்.

அரும்பெரும் இன்பத்தை அள்ளித் தரும் இன்பக்கருவூலமாகத் திகழும் ராகங்களில் தொன்மையானதும், தனித் தன்மைம்மிக்கதும் ஹிந்தோள ராகத்தில் புதைந்து கிடக்கும் அழகுகளை சினிமா இசையமைப்பாளர்கள் அள்ளி அள்ளித் தந்திருக்கின்றார்கள்.

தமிழ் பக்திப்பாடல்களில் T.M.சௌந்தரராஜன் பாடிய  "கற்பனை என்றாலும் கற்ச் சிலை என்றாலும்"  என்ற பாடலும் அருமையான ஹிந்தோள ராகத்தில் அமைந்ததே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.