01/01/2018

தமிழா.. தை ஒன்றே நம் புத்தாண்டு...


தை பிறந்தால் வழி பிறக்கும்..
தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும்...

மாசியில் மங்களம் சூடிடும்..
புது வரவுகள் பொங்கிடும்...

பங்குனியில் ஊரெங்கும் திருவிழா..
தெருவெங்கும் தேரோட்டம்...

சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க..
சித்திரை விழாக்கள் கோலாகலமாகும்...

வைகாசியில் வைபோகம்..
கன்னியரும் காளையரும் மணமாலைகள் சூடிட மங்களமாகிடும்...

ஆனியில் உச்சிவெயில் தணியும்..
ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும்...

ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும்..
உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும்...

ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும்..
தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும்...

புரட்டாசி விரதம்..
மாந்தரின் மனதை பக்குவப்படுத்த உதவிடும்...

ஐப்பசி மழை அடை மழை..
ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும்...

கார்த்திகையில் இல்லம்தோரும் அகல்விளக்கு..
ஒளிர்ந்திட நன்மைகள் குடி புகுந்திடும்...

மார்கழி குளிரில்..
வாசல்களில் கோலங்களும்
வயல்களில் வசந்தங்களும் பூத்திருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.