07/02/2018

முருகன் இந்து அல்ல... தமிழன்...


குமரிக்கண்டம் முதல் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கலியுலகம் வரை தமிழினத்தின் அடையாளமாக விளங்குபவன் முப்பாட்டன் முருகன். குமரிக்கண்டம் தொடங்கி பாரத கண்டம் முழுக்க தமிழனுக்கு சொந்தமானது.

அதற்கு ஆதாரம் தமிழில் இயற்றப்பட்ட தொல்க்காப்பியம், சிலப்பதிகாரம்,  அகநானூறு, புறநானூறு உட்பட 46 இலக்கியங்களில் அதற்கு ஆதாரம் இன்றும் காணப்படுகிறது.

தற்போது, அறிஞர் குணா அவர்கள் எழுதிய தமிழரின் தொன்மை என்ற புத்தகத்தில் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்தியா முழுமைக்கும் உள்ள தமிழர்கள் முப்பாட்டன் முருகனை முன்னிறுத்துவதால் ஏறக்குறைய 2800 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு பஞ்சம் பிழைக்க வந்த ஆரிய பிராமணர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் ஒரு அடையாளம் தேவைப்பட்டது.

அதற்கென்று அவர்களால் உருவாக்கப்பட்ட ஓர்  வழிபாட்டி முறை தான் விநாயகர் வழிபாடு.

தாங்களும் இந்தியாவின் பூர்வ குடிகள் தான் என்று நம்ப வைப்பதற்காக விநாயகரும் முருகனும் சகோதரர்கள் என்று திரித்தார்கள்.

இது குறித்து நாங்கள் முன்னிறுத்தும் கேள்விகள் ?

1.முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி என்றால், இந்தியா முழுவதும் விநாயகரை தூக்கி பிடிக்கும் ஆரிய பிராமணர்கள் ஏன் முருகனை தமிழகம் தாண்டி முன்னிறுத்தவில்லை?

2.தமிழ்நாட்டில் ஏறக்குறைய 2800 வருடங்களுக்கு முன்பு முருகனுக்கு அறுபடை வீடுகள் அமைத்த தமிழர்கள் அவரது அண்ணன் என்று சொல்லப்படும் விநாயகருக்கு ஏன் அமைக்கவில்லை?

3.முருகன், சிவன், பார்வதி,  விநாயகர் ஆகியோர் ஒன்றாக இருந்தது போன்று 2500 வருடத்திற்கு முன்பு (ஆரியர்களின் வருகைக்களுக்கு முன்பு) தமிழர்கள் கோவில் கட்டியதாய் ஆதாரம் உண்டா?

4.கந்தனுக்கு கந்த புராணம் இருக்கும் போது ஏன் விநாயகருக்கு விநாயக  புராணம் இயற்றவில்லை?

5.ஆதியில் குறிஞ்சி நிலத்தில் தான் மனிதன் வேட்டையாடி வாழ்ந்தான்.அந்த குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த முதல் தலைவன் தான் முருகன். நிலை இவ்வாறு இருக்கையில் 2500 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட விநாயகரை முருகனுடன் தொடர்பு படுத்தி பேசுவது நகைப்புக்குரியது.....

6. முருகனும் விநாயகரும் அண்ணன் தம்பி என்று சொல்லும் நீங்கள் ஏன் விநாயக சதுர்த்திக்கு கொண்டுக்கப்படு முன்னுரிமையை தைப்பூசத்திற்கு கொடுப்பதில்லை? தைப்பூசத்துக்கு நடைமுறையில் பொது விடுமுறை கூட இல்லையே?

7.தமிழகத்தை தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் ஏன் முருகனுக்கென்று கோவில்கள் அமைக்கப்படவில்லை?

8.தமிழர்களும் ஆரியர்களும் ஒன்றுதான் (இந்துக்கள்) என்றால் ஏன் ஈழத்தில் 85%  முருகனை(உங்கள் பார்வையில் இந்து) வழிபடும் தமிழர்களை இலங்கை இனப்படுகொலை செய்யும்போது இந்தியா ஏன் தடுக்கவில்லை?? மாறாக ஏன் ஆயுதம் கொடுத்து அழித்தொழித்தது? 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் கோவில்களை இடிக்கும் போது, தமிழர்களை இந்துக்கள் என்று சொல்லும் இந்தியா ஏன் தடுக்கவில்லை?

9.கீழடியில் தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியை ஏன் இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியது?
காரணம் - கீழடியில் கிடைக்கப்பட்ட 5000த்திற்கும் மேற்பட்ட பொருட்களை ஆராயும் போது மதம் சார்ந்த எந்தவொரு ஆதாரமும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. நடுகல் வழிபாடு தொடர்பான ஆதாரங்களே தொடர்ந்து கிடைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பு - தமிழர்களின் வழிபாடு இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு. அகழ்வாராய்ச்சி முழுவதுமாக நடைபெற்றிருந்தால் இந்தியாவே தமிழர்க்கு சொந்தமானது என்பது நிரூபணமாகிவிடும். எனவே தான் கீழடி ஆய்வு நிறுத்தப்பட்டது....

9.இந்து என்ற சொல் ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு கால்டுவெல் என்ற வெள்ளைக்காரரால் ஆரியரின் துணையோடு தமிழர்கள் உட்பட பூர்வ குடிகள் மீது திணிக்கப்பட்டதே. ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு உள்ள இலக்கியங்களிலோ கல்வெட்டுகளிலோ தமிழகத்தில் இந்து என்ற சொல் இருந்ததற்கான மரபியல் ஆதாரத்தை நிரூபித்துவிட்டால் முருகனை இந்து என்று நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

உண்மை இந்துவே விடைதேடு.....

விநாயகரை வைத்து உன்னை மூட்டாளாக்கும் ஆரியக் கூட்டத்தை அடையாளம் கண்டுக் கொள்வோம்...

இதன் நீட்சிதான் வீதிக்கு வீதி விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் என்ற பெயரில் கலவரம் செய்வதும்.   

நீ... இந்து  நீ..... இந்து  என்று உன்னை நம்பவைத்து.... அடிமையாக்கி..

சாஸ்தர- சம்ரதாயம் என்று சொல்லி உன்னை ஏமாற்றி மேலும் அடிமையாக்கி  ஆண்டு வரும் ஆரிய கூட்டத்தின் முகத்திரையை உணரருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.