07/02/2018

யார் இந்த பைபாஸ் அருள் ஜோதி..?


பல்லாவரம் காவல்துறை எல்லைக்கு  உட்பட்ட பகுதியில் தலைமை கான்ஸ்டபிளாக  பணிப்புரியும் அருள் ஜோதி, மக்களின்  நண்பன் என்று அழைக்கப்படுகிறர்.

அவர் பணியை எவ்வளவு சிறப்பாய் செய்கிறார்  என்பதை  தேடல் செய்தியாளர்  சொல்லுகிறார்..

தாம்பரம் பைபாஸ் - மதுரவாயல் பைபாஸ்  இடைப்பட்ட   பகுதியில்  இரவில் எந்த  ஒரு   விபத்து மற்றும்  அசம்பாவிதங்கள்  ஏற்படாமல்  தனது பணியை நேரம் பார்க்காமல் செய்வதோடு மட்டும் அல்லாமல் அந்த வழியாக  இரவு  நேரங்களில் செல்லும்  வாகனங்களில்  பழுது ஏற்பட்டாலோ அல்லது  வாகன எரிபொருள் தீர்ந்து விட்டாலோ  வாகன  ஓட்டிகளிடமிருந்து எந்த ஒரு கைமாறு எதிர் பாராமல் தானாக முன்வந்து  உதவி செய்து அறிவுரை சொல்லக்கூடிய ஒரு மாமனிதன்.

சில நாட்களுக்கு முன் அனகாபுத்தூரில்  வாகன சோதனை செய்து கொண்டிருக்கும் போது அருள் ஜோதி அவர்களுக்கு விபத்து ஏற்பட்டபோதும் கூட   தனது பணியையும் , சேவையையும் இன்னும் சிறப்பாக செய்து வருகிறார்

பல்லாவரம் காவல்துறை எல்லைக்கு  உட்பட்ட பகுதியில்  நேர்மையாக பணிபுரியும் மக்களின்  நண்பன் அருள் ஜோதி , அந்த  பகுதியிலுள்ள  கடை தெருவில் எந்த ஒரு  கடையிலும் கையை நீட்டி லஞ்சம் வாங்காத ஒரு மாமனிதன் தான் இந்த பைபாஸ்  அருள் ஜோதி.. வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.