05/03/2018

மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?


மகிழ்ச்சியாய் இருப்பது என்பது நாம் தேடி அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல.

இயல்பாகவே நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். இடையில் தான்  எங்கோ குழப்பி விட்டீர்கள்.

குழப்பத்தை விடுங்கள். மகிழ்ச்சியாய்  இருங்கள்.

உயர்ந்த குறிக்கோள் தேவை தான். ஆனால் அது நம் நிகழ்  காலத்தின் இனிமையைப் பாதித்து விடக் கூடாது.

வாழ்வின் மகிழ்ச்சி சென்றடைவதில் தான் இருக்கிறது என்பதில்லை. பயணத்திலும் இருக்கிறது.

உங்கள் மீது உங்களுக்குள்ள உயர்வான எண்ணங்களும், தன்னம்பிக்கையும் கூட உங்கள் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமையும். மகிழ்ச்சி சிறு செயல்களில் கூட இருக்கிறது.

எனக்குத் தலைவலி, காய்ச்சல், என் உடல் நிலை சரியில்லை என்று நினைத்து வருந்தினால் மகிழ்ச்சி இல்லாமல் போவது சில நாட்கள் தான்.

நானே சரியில்லை, என்று நினைத்தால் வாழ்நாள் முழுவதுமே மகிழ்ச்சி இல்லாமல் போகும்.

மனநிலை உடல்நிலையைப் பாதிக்கும்.

உடல்நிலை , மனநிலையில் தெரியும்
ஏதாவது சாதனைகள் செய்தால் தான் மகிழ்ச்சி என்பதில்லை.

சாலை ஓரத்தில் உள்ள புதர்களையும், காட்டுப் பூக்களையும் பார்த்து ரசிப்பது கூட மகிழ்ச்சி அளிக்கலாம்.

மழை  கூட மகிழ்ச்சி தான். நனைந்து தான் பாருங்களேன். ஒரு மழையைக்கூட தாங்காதா உங்கள் உடல்?

மகிழ்ச்சியான மனிதன் குற்றங்கள் புரிவதில்லை. மகிழ்ச்சியாய் வாழ பணம் தேவை. ஆனால் மகிழ்ச்சியைக் குறைத்துக் கொண்டு பணம் பண்ணும் போது வாழ்க்கை அடிபட்டுப் போகிறது.

மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சியைப் போன்றது. நீங்கள் அதை விரட்ட விரட்ட, அது உங்களை விட்டுப் பறந்து கொண்டே இருக்கும்.

புல்  தரையில் அமைதியாக அமர்ந்தால், அதுவும் உங்கள் கையில் அமர்ந்து கொள்ளும்.

பூங்காக்களுக்கு யாரும் வழி சொல்லியா தெரிய வேண்டும்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.