17/03/2018

நிலத்தின் மீதான நம் உரிமையை நிலைநாட்ட நம் பலத்தை காட்டுவோம்...


விவசாய விளைநிலங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் எடுத்து செல்வதை எதிர்த்தும், தேசிய & மாநில நெடுஞ்சாலைகள் ஓரங்களில் பூமிக்கடியில் கேபிள் மூலமாக மின்சாரம் கொண்டு செல்ல வலியுறுத்தியும்.. நாளை (17/03/18) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் பேருந்து நிலையம் அருகில் கொசவம்பாளையம் சாலையில் நடைபெறும் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு குடும்பத்தோடு பெருந்திரளாக உழவர்கள் அணிதிரண்டு பங்கேற்க வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

அனைத்து உழவர் இயக்கங்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவோடு நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள உழவர்களும் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் அணிதிரண்டு உரக்க குரல் கொடுத்தால் தான் நம் நிலத்தின் மீதான நம் உரிமையை காப்பாற்ற முடியும்.

ஒன்று படுவோம்
வென்று காட்டுவோம்..

இவண்
N.S.P.வெற்றி
செயல் தலைவர்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்
&
ஏர்முனை இளைஞர் அணி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.