17/03/2018

வாகன தணிக்கையில் உரிமை கோரப்படாத மற்றும் திருட்டு வாகனங்கள் உரிமையாளரிடம் ஒப்படைப்பு...


மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு நடவடிக்கையின்போது 53 உரிமை கோரப்படாத வாகனங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை செய்ததில், மேற்படி வாகனங்களின் உரிமையாளர்கள் விபரங்களை வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் இணையதளம் மூலமாக பெறப்பட்டு, தகுந்த ஆவணங்கள் கொடுத்து வாகனத்தை பெற்றுக்கொள்ளும்படி வாகன உரிமையாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் சரிபார்த்த பின் வாகன உரிமையாளர்களிடம் 15.03.2018 தேதியன்று மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் 53 வாகனங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

வாகனத்தை பறிகொடுத்து பல ஆண்டுகள் ஆனதால் நம்பிக்கை இழந்த நிலையில் இருந்த ஐந்து உரிமையாளர்களிடம்  வாகனங்கள்  8  வருடங்களுக்கு பின் ஒப்படைக்கப்பட்டது. இதனால் வாகன உரிமையாளர்கள் மதுரை மாநகர காவல்துறைக்கு தங்களது நன்றியையும், அளவுகடந்த மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

கடந்த 18.01.2018-ம் தேதியன்று 90 வாகனங்களை வாகன உரிமையாளர்களிடம் மதுரை மாநகர காவல்துறை ஒப்படைத்தது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.