07/04/2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் பகுதி - 6...

சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்க தரினத்தில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனப் பகுதி 6-ம் பகுதியாகும். இந்த 6-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் இடம்பெறும் குறிப்புகளும், செய்திகளும் மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்க்க போவதாக ஒரு செய்திக் குறிப்பை இந்த 6-ம் தீர்க்கதரிசனப் பகுதி இங்கே பதிவு செய்கிறது.


உலக வரலாற்றில் இடம் பெற உள்ள முக்கிய நாடுகளில் ஒன்றில் தற்போது உருவாகும் புயல் பல ஆயிரம் மக்களை பழிவாங்கிடப் போகிறது என்றும், இது “சுனாமி“ எனும் பேரலைகளால் உருவாகும் பேராபத்து என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை செய்கிறது. கடல் பரப்பில் உள்ள பல நகரங்கள் இதனால் அழிவிற்கு உட்படுத்தப்பட போவதாகவும் இது இறைவனின் நீயாயத்தீர்ப்பில் நடந்து முடியப் போகும் சம்பவம் என்று ஒரு செய்திக்குறிப்பை இந்த 6-ம் தீர்க்கதரிசனம் இங்கே மக்களுக்கு சுட்டிக் காட்டுகின்றது.



ஐரோப்பிய நாடுகளில் உருவாகும் இனக்கலவரம் அண்டை நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், போர்மூளும் அபாய சூழ்நிலை தற்போது உருவாகிடப் போவதாகவும், அமெரிக்கா போன்ற பெரும் தேசங்கள் கூட இதில் தலையிட்டு அதனால் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் அசாதாரணமான சூழ்நிலைகள் தற்போது ஏற்பட போவதாக 6-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை பதிவு செய்கிறது.


இந்திய தேசத்தின் வடமாநில எல்லையில் பயங்கரவாத கும்பல் ஒன்று பெரும் சோகத்தை மக்களிடையே ஏற்படுத்தப் போவதாக 6-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது. ஊரின் எல்லையில் உள்ள ஒரு ஆலயம் ஒன்று வெடி வைத்து தகர்க்கும் நிகழ்வும் கட்டாயம் நடந்து முடியும் என 6-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.



புத்தனின் ஏடுகள் உயிர்பெறும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சிறு நகரத்தை சீனா, திபெத்தின் வட எல்லையில் கண்டறியப்படும் நிகழ்வு ஒன்று உடனே நடக்க இருப்பதாகவும், இதன் வாயிலாக இந்திய தேசத்தின் மிகப்பெரிய தொன்மை வரலாற்றை சீனாவும், உலக நாடுகளும் அறிந்து கொள்ளும்படி இந்நிகழ்வு அமைய உள்ளதாக 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு தொன்மையான வரலாற்று குறிப்பை தீர்க்கதரிசனமாக இங்கே வெளிப்படுத்துகின்றது.


ஜப்பான் நாட்டின் தென்பகுதி மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், அங்கு உருவாகும் சுனாமி பேரலை பல ஆயிரம் உயிர்களை பழிவாங்கிட உள்ளதாக 6-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


சத்தியயுக தீர்க்கதரிசனங்கள் யாவும் மெய்படும் காலமாக இனி இக்காலம் இருக்கப் போவதாகவும், வரும் 6-ம் மாதம் முதல் துவங்கி மொத்தம் 27 மாதங்கள் வரை தீர்க்கதரிசனங்கள் நடந்து முடியும் காலகட்டமாக இருக்கப் போவதாகவும், இக்காலமே பூமியில் பல மாற்றங்களும், அதிசயங்களும் நடக்கும் காலக்கட்டமாக அமைய இருப்பதாக 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



துன்பங்கள் நிறைந்த மனித வாழ்க்கையில் இனி தெய்வங்களால் நன்மைகளும் ஏற்படப் போவதாக ஒரு செய்திக்குறிப்பை 6-ம் தீர்க்கதரிசனம் இங்கே பதிவு செய்கிறது.  அதாவது இறைவன் வரும் அந்த இறுதி சபையில் உள்ளவர்கள் யாவரும் அனுபவித்து வந்த பல சோதனைகளும், கஷ்டங்களும், துன்பங்களும் இனி ஓடி ஒதுங்கும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், அந்த இறுதிச்சபையில் உள்ள அனைவருமே இனி ஏற்றத்தை காண்பார்கள் என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


சென்னை மீண்டும் பெரும் புயலால் தாக்கப்பட இருப்பதாகவும், இதற்கு முன் எச்சரிக்கைகள் செய்யப்பட்டு இருப்பினும் பலத்த சேதங்களை இந்த புயல் பெரும் அளவில் ஏற்படுத்தும் என்றும், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் அளவில் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று 6-ம் தீர்க்கதரிசனம் மிகுந்த ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

சத்திய யுக தீர்க்கதரிசனங்கள் யாவும் இனி உலக மக்களிடையே வேகமாக கொண்டு செல்லும் பணிகள் துவங்கிட இருப்பதாகவும், இதற்கு புனித தேவதைகளும், சித்தர்களும் காரண கருவியாக செயல்பட போவார்கள் என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு இறைசார்ந்த செய்திக்குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


இறைவனின் பங்களான், இறை மகன் இயேசு என்று அழைக்கப்படுகின்ற “புனிதரின்“ ஆன்ம பிரவேசம் வரும் புனித நாள் அன்று இப்பூமியில் நடைபெறும் என்றும், அது நடந்த 3-ம் நாள் இவ்வுலகின் ஒரு மூலையில் ஒரு அதிசயத்தை மக்கள் காண உள்ளார்கள் என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


மன்னார்வளைகுடா புயலைப் பற்றி மீண்டும் மக்களுக்கு இந்த தீர்க்கதரிசனத்தின் வாயிலாக ஒரு எச்சரிக்கை பதிவு செய்யப்படுகிறது.  மக்கள் விழிப்பு நிலையில் இதனை உணர்ந்து செயல்பட்டால் பல உயிர் சேதங்களை தவிர்க்க முடியும் என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



தென்திசைக் கடவுளைப் பற்றி இனி செய்தித் தாள்களில் பல செய்திகள் வெளிவரும். இது “போகரின்“ வெளிப்பாடு நடந்ததற்கான அறிகுறிகளாகும். இதை நிருபிக்கும் வகையில் நாம் ஏற்கனவே வெளியிட்ட 5-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம் பெற்ற ஒரு ஊரில் 7மணி  நேரம் மழை பொழிவு இருக்கும் என்றும், அது முடிந்த பிறகு கேரளா தேசத்திலிருந்து “நம்பூதரி“ ஒருவர் முருகப்பெருமானின் மற்றொரு நவபாசனச் சிலை பற்றி ஒரு செய்திக்குறிப்பை வெளியிடுவார் என்றும், இது உலக மக்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்றும், இதுவும் “போகரின்“ செயலாக இருக்கும் என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

சித்திரை திங்கள் அன்று பல குழப்பமான செய்திகள் தமிழகம் முழுவதும் வெளிவர இருப்பதாகவும், மக்கள் இதனை பெரிதும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும், அரசியல் பிரவேசங்கள் பல அப்பொழுது நடக்கும் என்றும், தமிழக மக்களின் மனப்போக்கு இவற்றை கண்டு கொள்ளாமல் இருக்கும் சம்பவம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் பல விமர்சனங்களை வெளிப்படுத்த போவதாக இருக்கும் என 6-ம் தீர்க்கதரிசனம் நடக்க போகும் முக்கிய நிகழ்வுகளை பற்றி இங்கே தெரிவிக்கின்றது.


நாசா வின் பயணம் இந்தியாவை நோக்கி வர உள்ளதாகவும், அவர்கள் இடத்தில் உள்ள ஒரு குறிப்பை ஆய்வு செய்வதற்காக இந்திய நாட்டிற்கு வர உள்ளதாகவும், அதற்கு இந்திய அரசு முழு “ஒப்புதல்“ வழங்கும் என்றும், அவர்களின் தேடுதல் ஆய்வுகள் தமிழகத்திலும் இருக்கும் என 6-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


இந்திய மலைத்தொடர்களில் உள்ள காடுகளில் இனி வினோதமான வெளிச்சங்களை மக்கள் காண உள்ளனர் என்றும், தமிழகத்திலும் இது போன்ற வினோதமான வெளிச்சங்களை மக்கள் காண்பார்கள் என்று 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


வான் மண்டலத்திலிருந்து வரும் “எரிக்கல்“ ஒருவரின் வருகையை உறுதிப்படுத்துவதாக அமையும் என்றும், அச்சமயத்தில் கடலில் மிகப்பெரிய இராட்சச அலைகள் உயர்ந்து எழுந்து ஆர்ப்பரிக்கும் என்றும், நிலப்பரப்பில் பல வெடிப்புகள் ஏற்படும் என்றும், வருகின்ற ஒரு முக்கிய நிகழ்வைப் பற்றி 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

சத்திய யுக தீர்க்கதரிசனங்களான “ஆகாயத்தில் ஒரு ஒளி“, “உண்மைகள் உறங்குவதில்லை“ தற்போது வெளிவந்து கொண்டுள்ள “சத்திய யுகம்“ இவை மூன்றும் இறைவனால் வெளிப்படுத்தப்படுகின்ற தீர்க்க தரிசனங்கள் என்றும், இவை செயல்படும் விதமும், அதன் காரணங்களையும் மக்கள் முன்கூட்டியே அறிய முடியாது என்றும், அவை நடந்து முடியும் சமயத்தில் மட்டுமே நமது தீர்க்க தரிசனங்களோடு ஒப்பிட்டு பார்த்து, அதன் உண்மைகளை தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்றும், படிப்பதினால் இதன் செயல்பாடுகளை ஒருவர் அறிந்து விட்டார் என நினைத்து கொள்வது முட்டாள்தனமாக போய்விடும் என 6-ம் தீர்க்கதரிசனம் முக்கிய ஒரு செய்திக் குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

நிகழ்வுகளை அடையாளமிட்டு காட்டுவதே சத்திய யுகத்தின் வருங்கால தீர்க்கதரிசனத்தின் நோக்கம் என்றும், இதனை மக்கள் புரிந்து கொண்டு வாழ்ந்தால் இனிவரும் காலங்கள் உபத்திரங்கள் இல்லாத நற்காலமாக இருக்கும் என 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு எச்சரிக்கை செய்கிறது.


மதங்களுக்கு என்று தெய்வங்கள் இல்லை என்றும், தெய்வத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கே மதங்கள் என்றும், மதத்தின் வழியே பிரபஞ்சத்தின் நியதிகளையும், வாழ்வியல் கோட்பாடுகளையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், அதனை விடுத்து மதத்தை பெரியதாக எடுத்துக் கொள்ளும் மக்கள் கூட்டம் அந்த மதத்தின் பெயராலே அழிவார்கள் என 6-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

இறைவனின் நீயாயத் தீர்ப்புகள் தற்போது மதத்தின் பெயராலே இப்பூமியின் மீது இறங்கிட இருப்பதாகவும், மக்கள் இக்காலகட்டத்தில் ஆழ்ந்த விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என ஒரு எச்சரிக்கை செய்தியினை 6-ம் தீர்க்கதரிசனம் இங்கே பதிவு செய்கிறது.


கடவுளின் திருநாமங்கள் மக்களாலும், தீர்க்கதரிசிகளாலும் ஏற்படுத்தப்பட்டவை என்றும், அவைகளை மக்களுக்காகவே இறைவன் ஏற்றுக் கொள்கிறார் என்றும், அதனை புரிந்து கொள்ளாத மதவாதிகள் பெயரளவில் உள்ள இறைவனை, வேறுபடுத்தி பல கொள்ளைகளையும், கொலைகளையும், பாதகச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்றும், அவ்வாறு உள்ள அந்த மதவாத அமைப்புகளின் மீது இறைவனின் நீயாயத்தீர்ப்புகள் தற்போது “அக்னி“ போன்று இறங்கிடப் போவதாக 6-ம் தீர்க்கத்தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.

தோற்றங்களும், உருவங்களும், அமைப்புகளும் ஒன்றைப் போல இருக்கவே முடியாது என்றும், அவை வேறுபட்ட அமைப்பில் இருப்பதற்கு மனித மூலங்களே காரணம் என்றும், இந்த மூலங்களின் படைப்பை இறைவனே உருவாக்கினார் என்ற கூற்று தற்போது மெய்படும் அளவிற்கு இந்த பூமியில் இறை சார்ந்த பல அதிசயங்களும் ஆச்சர்ய்ஙகளும் நடக்க இருப்பதாக 6-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

இந்த உண்மைகளை அறிந்துகொள்ள அதுவரை நாம் விழிப்புடன் காத்திருப்போம்.

குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.