30/05/2018

நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளியான பாஜக MLA, கைது செய்ய வாரண்ட் பிறப்பித்த நிலையில் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்...


விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களிலும் கரிஷ்மா அக்ரோ டெக் என்கிற பெயரில் 2016 ஆம் ஆண்டு குறைந்த பணத்திற்கு நிலம் தருவதாக கூறி பொது மக்களிடம் 4 கோடி ரூபாய் அளவிற்கு நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த 9 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தை 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இதில் 6 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் தொகுதியின் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் சோபாராணி குஷ்வா ஆவார், இந்நிலையில் வழக்கு விசாரணை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகமல் இருந்த சோபாராணி குஷ்வாவை விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய சம்மனை அடுத்து மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நடுவர் நீதிமன்ற நீதிபதி மீரா சுமதி முன்பாக சரணடைந்தார், 2 இலட்சம் பினை தொகை செலுத்தியதை அடுத்து சோபாராணி குஷ்வாவை பிணையில் விடுவிக்கப்பட்டார், வழக்கு விசாரணை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.