27/07/2018

திருமந்திரம் - 334...


அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயம்செய் மேல்பா லவனொடு
மங்கி உதயம்செய் வடபால் தவமுனி
எங்கும் வளம்கொள் இலங்கு ஒளி தானே.

மூலாதாரத்தில் இருந்து எழுந்த நாதமானது அக்னி வடிவாய் சிரசின் முன் பக்கம் நிறுத்தும் சாதகனான அகஸ்தியன், அதை சிரசின் பின்பக்கம் விளங்க செய்து, பின் அது சிரசு முழுவதும் ஒளி வடிவாய் நிலை பெற செய்பவராம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.