06/07/2018

8ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு.. நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த நபர்....


உத்தரபிரதேச மாநிலம் ஷாமி என்ற மாவட்டத்தில் ஆர்யன் என் தனியார் மருத்துவமனை உள்ளது. 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்தான் இந்த மருத்துமனையின் உரிமையாளர்.

இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனை ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளார்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை உரிமையாளர் மற்றும் டாக்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அந்த மருத்துவமனையில் மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் அசோக் ஹண்டா ஆய்வு செய்தார்.

விசாரணை நடத்தப்பட்ட பிறகே சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி அசோக் குமார் கூறினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.