06/07/2018

தோழர் முகிலன் அவர்களை கொலை வேண்டுமென்று முடிவு செய்து விட்டது.. பாஜக - அதிமுக அரசு...


ஸ்டெர்லைட் போராட்டத்தில் அவர் இருந்திருந்தால் சுட்டு கொன்றிருப்பார்கள் ஆதலால் தற்போது சிறையில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி ஏதோ நோய்வாய்பட வைத்து கொல்ல திட்டம்.

3 வருடம் யாருமே அடைக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தில் தோழர் முகிலன் அவர்களை மட்டும் தனியாக பூட்டி வைத்துள்ளனர். அவர் அடைக்கப்பட்டுள்ள அறையின் பின்பகுதியில் கழிப்பறைகளில் இருந்து வரும் மலம் செப்டிக் டேங்க் கட்டாமல் நேரடியாக அப்படியே தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான் தோழரை அடைத்து வைத்துள்ளனர்.

தோழர் இரண்டு நாட்களாக இரவு ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை காரணம் பத்தாயிரம் கொசுவாவவது இருக்கும் அந்த அறையில் அவரை சிறைபடுத்தியுள்ளனர்.

அந்த கட்டிடத்தில் ஒரு 5 நாட்கள் இருந்தால் போதும் ஏதாவது ஒரு நோய் தாக்கப்பட்டு இந்த அரசுக்கு தேவையான அவர் உயிர் கிடைத்து விடும். இது சாதாரண விசயம் அல்ல இப்படித்தான் சிறையில் நோய்வாய்பட்டு பல மரணங்கள் நடக்கும் போலிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.