07/07/2018

நாங்கள் சொல்லும் பிராவைத்தான் அணிய வேண்டும்.. மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் உத்தரவு....


மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள விஷ்வசாந்தி குருகுல் பள்ளி. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நிர்வாகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி மாணவிகள் வெள்ளை நிற பிரா அல்லது ஸ்கின் நிறத்தில்தான் அணிய வேண்டும். வேறு நிறத்தில் பிரா அணிந்து வந்தால் அது பார்ப்பவர்களது கண்களை உறுத்தும்.

நாங்கள் சொல்லும் பிராவை அணிந்து வர வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்   என்று எச்சரித்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்தினர். ஆனால் அதனை எல்லாம் கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் தனது முடிவில் உறுதியாக உள்ளது.

மேலும் வெள்ளை மற்றும் ஸ்கின் நிறத்தில் பிரா அணியாவிட்டால் அது மற்றவர்களின் கண்களை உறுத்துவதோடு, அது பாலியல் பலாத்காரத்திற்கு வழிவகுக்கும் என்று கூறி உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.