07/07/2018

லோக் ஆயுக்தா சட்டமும்.. அதிமுக ஜெயக்குமாரும்...


ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் அதிகாரிகளை விரைவாக விசாரித்து தண்டனை கொடுக்கும் சிறப்பு சட்டம்.

இதை தயாரிப்பது யார்?

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்.

அவர்களை தண்டிக்க அவர்களே சட்டம் தயாரிக்கிறார்களா?

ஆமாம்.

அப்போ இந்த சட்டம் வலுவில்லாமல் இருக்குமாறு அவர்கள் தயாரிக்க வாய்ப்பிருக்கிறதே?

கண்டிப்பாக இருக்கிறது. அதனால் தான் இந்த சட்டத்தை அமல்படுத்தும் முன்பு பொது மக்கள் பார்வைக்கு வைத்து அவர்கள் கருத்தை அறிந்து மாற்றங்கள் தேவைப்பட்டால் அந்த மாற்றங்களுடன் இந்த சட்டத்தை அமல்படுத்த சொல்கிறோம்.

இந்த சட்டம் இப்போ யார் பொறுப்பில் தயாராகிறது?

நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் தான் இதற்கு பொறுப்பு. அதனால் தான் அவர் மேற்பார்வையில் தயாரிக்கப்படும் இந்த சட்டம் குறித்த விவாதத்திற்கு அவரை அழைக்கிறோம்.

விவாதத்திற்கு வருவாரா?

அவர் தைரியமானவர். கண்டிப்பாக பயப்படாமல் வருவார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.