07/07/2018

தூத்துக்குடி துறைமுக விருந்தினர் மாளிகை அருகே வாலிபர் உடல் மீட்பு : கொலையா? என போலீசார் விசாரணை...


தூத்துக்குடி துறைமுக விருந்தினர் மாளிகை அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தெர்மல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் தூத்துக்குடி திரேஸ்புரத்தை சார்ந்த ஆனந்தன் மகன் குமார்(38) என்பது தெரிய வந்தது. கடலுக்கு மீன்பிடிக்கும் செல்லும் தொழிலாளியான இவர் என்பது தெரிய வந்தது. பின்னர் இறந்து கிடந்த குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.