21/07/2018

ஆடிமாதத்தில் கொண்டாடுவோம் குலதெய்வத்தை...


ஊரு விட்டு, தேசம்விட்டு வாழ்ந்தாலும், வருடத்தில் ஒருநாள் நம்மை நம்முடைய பாட்டன்-பூட்டன் வாழ்ந்து மறைந்து "பட்டவன்"னா இருக்கிற மண்ணை நோக்கி திரும்பவைப்பது நம்ம குலதெய்வ வழிபாடு. பங்காளி சண்டையில் ரெண்டுபட்டு கிடந்தாலும் வருடத்தில் ஒருமுறை நம்மை ஒன்றாக்கும் இந்த குலசாமி வழிபாடு.

இயற்கையை வணங்கி, இன்புற்று இருந்த நம்ம தமிழர் மெய்யியல் வாழ்வின் பரிணாமம், நன்றி நவிழ்தலின் மிச்சம், முன்னோர் வழிபாடு, மூத்தோர் வழிபாட்டின் தொடர்ச்சி என தமிழர் வரலாற்றின் பொக்கிசம், ஆரிய வர்ணாசிரமத்தாலும், திராவிட கயவர்களாலும் இன்றுவற்றை வீழ்த்த முடியாமல் இருக்கின்ற தமிழர் பண்பாட்டியலின் அறம் நமது குலதெய்வ வழிபாடு.

மாரியம்மா, காளியம்மா, பிடாரி, வெட்டுடையா காளி, கருப்பு, முனியாண்டி, அய்யனார், கொல்லங்குடி கருப்பாயி, வீரப்புத்திரன் சாமி என எல்லா ஊரிலும் ஆயிரக்கணக்கான குலசாமிகள் கொலுவீற்றிருக்கும். நாம் தினந்தோறும் சாலையின் வழியோ, காடுகளின் வழியோ கடக்கும் போது ஒரு நடுகல்லில் மஞ்சள் துணியோ, சிவப்பு துணியோ சுற்றி, ஒரு இரும்பு வேலொடு, மரத்தின் நிழல்களை நாம் கடக்கும் போதெல்லாம் அங்கே "தமிழர் வரலாற்றில் வாழையடி வாழையாக வாழ்ந்த எவரோ ஒருவர் தெய்வமாக இருக்கிறார் என்பதை உணரவேண்டும்.

குலசாமியின் வரலாற்றை தொட்டு, அந்த மூல கதைகளின் வேர்களை தேடி ஓடினால் தமிழரின் தொன்மையுடைய அரியபல அற்புத உண்மைகளை அறியலாம். தமிழர் பெருங்கோவில்களில் கலசங்களில் தானியங்களை சேமித்து வைத்து பேரழிவு நாட்களில் தமிழர் சந்ததிக்கு பயனுறவேண்டும் என்று எப்படி வகைப்படுத்தினார்களோ, அதுபோல தமிழரின் ஒட்டுமொத்த வரலாறும் சிறுசிறு தொகைகளாக குலதெய்வ வழிபாட்டில் சேமிக்கப்பட்டு உள்ளது.

எனவே, குலதெய்வ வழிபாடு தமிழர்கள் கொண்டாடப்பட வேண்டியது. குலசாமிக்கு பொங்கல் வைத்து கிடாவெட்டுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று சொல்வதெல்லாம் பைத்தியகாரர்களின்(-----++++) கூற்று. குலசாமி வழிபாட்டினால் சாதி சண்டை வரும் என்று பேசுவதெல்லாம் ஆரிய அடிவருடிகளான திராவிடர்களின் சூழ்ச்சி. இந்த சூழ்ச்சி சதிவலையில் சிக்காமல் மீள்வதில் மட்டுமே தமிழர் பண்பாட்டு மீட்சி இருக்கிறது.

இன்று ஆடிமாதம் முதல் தேதி. குறிப்பாக தமிழர்களின் முன்னோர்கள் குலசாமி வழிபாடு என்ற முறையில் தனது சந்ததிகளை ஆசீர்வதிக்க வரும் அற்புத நிகவுகள். தமிழர்கள் அனைவரும் தங்களது குலசாமி வழிபாட்டை விமர்சையாக கொண்டாட வேண்டுகிறது நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி.

நகரத்தில் இருந்து ஒருநாள் விடுப்பு எடுத்து பெண்டு பிள்ளைகளோடு கிராமம் நோக்கி சென்று, கிடாவெட்டி சோறு தின்னு மகிழ்ந்திருப்பதோடு நின்றுவிடாமல், நமது சந்ததிகளாக இருக்கும் இளைய பிள்ளைகளுக்கு நமது குலசாமி வழிபாட்டின் கதைகளை விரிவாக சொல்லி, ஒவ்வருவரும் தனது குலதெய்வம் பற்றிய மூலக்கதைகளை ஆவணப்படுத்தும்படியாக கோரிக்கையை வைக்கிறது நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி.

ஊரெங்கும் தோரணம் கட்டி, ஒலிபெருக்கிகள் கட்டி, குலசாமி பற்றிய அருமை பெருமைகளை பதாகையை வைத்து, கிடாவெட்டி, எல்லோரையும் அழைத்து இன்பமாய் விருந்து வைத்து கொண்டாடுங்கள் நமது குலதெய்வ வழிபாட்டை.

குலதெய்வங்கள் சிறுதெய்வங்கள் அல்ல, அவர்கள் நமது பெருமைக்குரிய இனமுன்னோர்கள். கொண்டாடும் குலசாமிகளை, இந்த ஆடிமாதத்தில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.