28/07/2018

புத்தருக்கு முன்பு தமிழகத்தில் எந்த இனம் வாழ்ந்தது...


வியக்க வைக்கும் வரலாற்று குறிப்பு...

இந்திய வரலாறு திரித்து எழுதினாலும் அல்லது வேதங்களின் அடிப்படையில் தான் உருவாக்க வேண்டும் என்று முழங்கினாலும்.

இந்தியா புத்தருக்கு முன்பு எப்படியாக இருந்தது என்ற கேள்விக்கு பலர் பலவாறாக பதில் தந்துள்ளனர்.

வால்காவில் இருந்து கங்கை வரை புத்தகம் இந்திய வரலாற்றை பேசும் புத்தகம் தான் ஆனால் இதில் முற்றிலுமாக தமிழ் இனத்தை புறக்கணித்தும் தமிழர்களை காட்டுமிராண்டி இனமாகவும் தான் சித்தரித்துள்ளார்.

காரணம் வேதங்களின் சரித்திர அடிப்படையில் உருவான இந்திய வரலாற்று நூல் இது. .

பெரும்பாலான இந்துமத வேதங்களே புத்தர் காலத்திற்கு பின்னாடி உருவானது தான் என்ற உண்மையை மறந்து எழுதியுள்ளது கொஞ்சம் ஜீரணிக்க முடியாத விஷயம் தான்.

அப்போ புத்தருக்கு முன் யாராக இருந்தது இந்தியா..

(இந்தியா அப்போது முழு இந்தியாவாக இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும்)..

முகலாயர் ஆட்சியில் ஷார்ஷாவால் பல சமஸ்தானங்களை ஒன்று திரட்டி கொடுப்பதை கொடுத்து சாலைகளை முதன் முதலாக முழு இந்தியா முழுவதும் அமைத்து ஒன்று திரண்ட இந்திய மக்கள் இவர்கள் என்று அறிவித்தான்.

அப்படி பார்த்தால் புத்தர் காலத்திற்கு முன்பு இந்த இந்தியா பல குழுக்கள் வாழும் பிரதேசம்.

ஒரே தலைமை இல்லை.

இந்த காலகட்டத்தில் சாதி உருவாக்கபடவில்லை.

அப்படி சாதிகள் இல்லா தமிழகத்தில் யார் வாழ்ந்து வந்தார்கள் தெரியுமா?

நிச்சயமாக உறுதியுடன் நான் கூறும்  வார்த்தையை பதிவிட்டுக் கொள்ளுங்கள்.

தமிழகம் மற்றும் இந்தியாவில் பல பகுதிகளிலும் வாழ்ந்து வந்த ஒரே இனம்.

நாகர்கள்.. (நம் முன்னோர்கள்)..

இந்த நாகர் இனம் தான் தமிழகம் முழுவதும் வாழ்ந்து வரும் இனம்,

நாகர்கள் வாழ்ந்த பட்டிணம் (இடம்)
நாகப்பட்டினம் ஆனது..

நாகர்கோவில் வரலாறும் இவர்களே..

வேதங்களை வைத்து இவர்களை பழிக்க தொடங்கியது பிற்காலத்தில் வந்த ஆரிய இனம்,

இவர்களை ஏற்றுக்கொண்டவர்வகளை சமாதானமும்..

ஏற்காதவர்களை சம மக்களை வைத்து பிற்காலத்தில் இவர்கள்
அழிக்கப்பட்டார்கள்.

அப்படி தப்பியோடி உயிரை காப்பாற்றிக்கொள்ள பல நாட்கள் பயணப்பட்டு ஒரு மலையின் உச்சியில் தங்கள் வாழ்க்கையை துவங்கினர்
அந்த இடம் தான் நாகாலாந்து.

இவர்கள் அரச பரம்பரையாகவும் வாழ்ந்து வந்தனர்.

மருதன் இளநாகனார்
முரஞ்சியூர் முடிநாகனார்
என்று பல புலவர்களும் இருந்துள்ளனர்.

இலங்கை வரலாற்று நூல்  மகாவம்சத்திலும் இவர்கள் பற்றிய குறிப்பு உண்டு.

இவர்கள் பழங்குடியினர் என்று மட்டுமே பலர் குறிப்பிடுகிறார்.

அது தவறு பழங்குடி தமிழர்கள் என்று குறிப்பிட வேண்டும்.

அம்பேத்கர் கருத்து ஒன்று உள்ளது...

அதாவது இந்த நாகர் இனம் மக்கள் பண்பாட்டு ரீதியாக அழிக்கப்பட்டு திசை தெரியாமல் தப்பித்து ஓடினர் பலர்..

அதில் சிலர் இன்றைய மங்கோலியாவில் தஞ்சம் புகுந்தனர் என்றும் மங்கோலியாவின் மூதாதையர்கள் நம் தமிழர்கள் தான் என்றும் ஆய்வு ரீதியாக குறிப்பிடுகிறார்.

அதே மங்கோளிய இனத்தில் இருந்து வந்த தி ஜி மூ இனத்தை சேர்ந்தவர் தான் முகலாய மன்னர் பாபர்.

எப்படி சுற்றியுள்ளது தமிழ் இனம் பாருங்கள்.

இதே நேரத்தில் இங்கு மிச்சம் இருந்த நாகர்களையும் கடவுளாக உயர்தியது ஆரியர்கள்.

காரணம் அந்த இனத்தை அழிக்க..

புரிய முடிகிறதா ?

நாகம்மா என்று கூறும் கடவுளின் ஆரம்ப வரலாறு கூறுகிறது.

நாகப்பாம்பு வழிபாடு எல்லாம் இதான்.

நாகர்கள் இனத்தில்  உள்ள இருவரை தேர்தெடுத்து அவர்கள் கடவுள்கள் என்று கட்டவிழ்த்து பிண்டம் வழியாக சென்று வந்தவர் என்றாகி அந்த இனமே கடவுளின் இனம் என்றாக்கி ஒரு கற்பனை கதாபாத்திரம் உருவாக்கி பாதி உடல் மனிதம் பாதி உடல் பாம்பு வடிவமாக உருவாக்கி.

அந்த இனப்பெண்களை யாரும் திருமணம் செய்ய வேண்டாம் கடவுளின் பிள்ளையை திருமணம் செய்ய நமக்கு திராணி இல்லை என்று கட்டவிழ்த்து மீதமுள்ள இனத்தையும் அழித்தது ஆரியம்,

ஏற்கனவே இவர்கள் எப்படி கடவுளாக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை தொடராக பதிவிட்டுள்ளேன் பழைய பதிவை பாருங்கள்.

இதற்கு ஆதாரமாக விளங்கும் இன்றும் நாகப்பட்டினத்தில் நாகப்பாம்பை வணங்கி அதற்கு பிரமாண்ட கோவில் உள்ளது.

அதை காணும் போது ஒரு இனத்தின் அழிப்பு தான் கண்களில் மிளிர்கிறது.

நீங்கள் கூறும் எந்த சாதியானாலும் தலித்தாக இருந்தாலும் வன்னியர் முதலியார் செட்டியார் பறையர் கள்ளர்கள் இப்படி எதுவானாலும் இத்த இனத்தின் சொச்சத்தில் இருந்து உருவானவை தான்..

ஜீரணிக்க கடினமாக இருந்தாலும் இதுவே உண்மை..

நம் எல்லா சாதியினரின் மூதாதையர்கள் நாகர்கள் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.