18/08/2018

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்...


வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த   பச்சூர்  ஊராட்சி   கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மயில்வாணன். இவருடைய மகள் ஜெயஸ்ரீ (வயது 20). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு பயின்று வருகிறார். இவருக்கும் வேலூர் மாவட்டம்  வாணியம்பாடி நகரம் பழைய பேட்டை பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் மயில்வாணன் (22) என்ற  இளைஞருக்கும்  இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் கடந்த இரண்டு  ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ‌மயில்வாணன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.  இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயஸ்ரீக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள்  தீவிர முயற்சி  எடுத்து வருவதை அறிந்த காதலர்கள்
 கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள  ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில்  ரகசிய  திருமணம் செய்துகொண்டு  அதன்பின் தாங்களுக்கு  பாதுகாப்பு கேட்டு  வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில்  தஞ்சமடைந்தார்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (21). இவர், ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளாக ராணு வீரராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்  சதீஷ்க்கும்  அதே பகுதியை சேர்ந்த ஜோதிகா (18) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது இதில் ‌ஜோதிகா, குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, விடுமுறை எடுத்து கொண்டு ஊருக்கு வந்த ராணுவ வீரர் சதீஷ், ஜோதிகாவை வெளியே அழைத்துச் சென்று வேலூர் அருகே அரியூரில் உள்ள மாரியம்மன் கோவிலில்  இந்து முறைப்படி  திருமணம் செய்து கொண்டு தாங்களுக்கு உரிய  பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்.பி. அலுவல கத்தில் தஞ்சமடைந்தனர்.
 
ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரண்டு காதல் ஜோடிகள் தாங்களுக்கு உரிய பாதுகாப்பு கேட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.