23/08/2018

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி விவசாயி பரிதாப சாவு...


தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை, திருமலைத் தெருவைச் சேர்ந்தவர் நல்லக்கண்ணு மகன் நெல்லையப்பன் (37), விவசாயி. இவர் நேற்று வல்லநாட்டில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இன்று காலை அவரது உடல் கரை ஒதுங்கியது.

இது குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.