10/08/2018

நான்கு திராவிடத்தின் ஆணிவேர்களும் சாய்ந்தன...


திராவிடம் என்ற கருத்தியல் இனி இந்த மண்ணில் எடுபடாது..

தற்போது நடக்கும் ஆட்சியும் எப்படியாவது கவிழ்க்கப்படும்...

புதிய கருத்தியலில் சிக்கப்போகும் தமிழகம்..

ஒரு கருத்தியலின் அடித்தளமும், அதுக்கான தலைவனும் மக்கள் உணர்ச்சியா கட்டமைக்கப்படுது திராவிட சகாப்தம் வேரறுந்தது, அன்று எந்த கருணாநிதியின் உரையைக் காண மக்கள் மற்றும் இளைஞர்கள் பட்டாளம் திரண்டதோ, அதே போன்ற ஒரே பாணியான சூழல் இப்போ உருவாக்கப்படுது, அதுவும் மக்களைக் கவரும் வகையில்..

அதே ஆரியத்தை எதிரியாக கொண்டு, இங்கே புது கருத்தியல் பொம்மை ஆள்றதுக்கான மாயக் கண்ணாடி கருத்தியல் வெற்றி பெற வைக்கப்படும்..

எப்போதும் ஆள்றது ஆரியனே..

இங்கே ஆட்சியில் அமர்த்தப்படுவது அவனது எதிர்மறை போன்ற பொம்மைகள்...

திராவிட - ஆரிய கள்ளக் கூட்டு நாம அறியாததா ?

தமிழ்த்தேசியம் (திராவிடம் - சிறப்பு தோற்றத்தில் வரும்) ஊடகம் யாரை பிரபலமாக்குதோ அவனே அடுத்த தலைவன்...

தமிழ்த்தேசியம்னா உண்மையான தமிழ்த்தேசியமில்ல, ஈழக் கருத்து சிலவற்றை கொண்டு மக்களை கவரும் வகையில் பிரபலமாகிட்டு வருது, நான் இந்த தமிழ் தேசியத்தை இப்போ எந்த குறையும் சொல்லமாட்டேன்...

அதான் 3 வருசம் இருக்கே, சிறப்பான அரசியல் காயாநகர்த்தல் நடக்கும்,

அதுவும் மக்களுக்கு தெரியாத அளவுக்கு குழப்பமான சூழலை ஏற்படுத்தும் தலைவனும் பிரபலமாவான், அந்த விளம்பரம் எதிர்மறை விளம்பரமா கூட இருக்கலாம், ஏன்னா திராவிடம் அப்படித் தான் வளர்ந்தது..

அந்தாள் கடைசி சில மாதங்களில் கூட பிரபலமாக்கப்படலாம்..

ஆனா கடைசிவரை ஆரியத்தால் இங்கே காலூன்ற முடியாது, வரவும் மாட்டான்..

ஏன்னா 700 வருசமா வேசம் போட்டு இந்திய ஒன்றியத்தை ஆள்றதே அந்த வணிக குமபல் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.