03/09/2018

தாயின் அன்பு கிடைக்காததால் திருடனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன மகள்.. 1 மணி நேரத்தில் மீட்கப்பட்டார்...


திருச்சியைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவருக்குத் திருமணமாகி, 14 வயதில் தேவி (பெயர் மாற்றம்) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த கோவிந்தராஜ், திருச்சியில் வேலைபார்த்தபோது அன்னலட்சுமியுடன் நட்பு ஏற்பட்டது. அதன்பிறகு மகளை அழைத்துக்கொண்டு கோவிந்தராஜுடன் சென்னை, கண்ணகி நகருக்கு வந்துவிட்டார் அன்னலட்சுமி.

கணவன் மனைவியாக வாழ்ந்த இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. அதன்பிறகு, முதல் மகளை அன்னலட்சுமி சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த தேவி, கடந்த 30-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் அன்னலட்சுமி புகார் கொடுத்தார்.

போலீஸார், தேவியைப் பல இடங்களில் தேடினர். தேவியின் தோழிகளிடம் விசாரித்தபோது,  தேவி ராஜா என்ற திருடனுடன் சென்றது தெரியவந்தது. ராஜாவின் வீடு தேனாம்பேட்டையில் உள்ளது. எனவே தேவிக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டு விட கூடாது என துரிதமாக செயல்பட்ட போலீசார் தேனாம்பேட்டை சென்று அங்கிருந்த தேவியை மீட்டு, பெற்றோரிடம்  ஒப்படைத்தனர்.

தேவியிடம் பெண் காவலர்கள் விசாரித்தபோது,  'என்னுடைய அம்மா இரண்டாவது கணவருடன் வாழ்வது எனக்குப்பிடிக்கவில்லை.  என்னை அவர் சரிவர கவனிப்பதில்லை. என்னிடம் அவர் அன்பாகப் பேசுவதில்லை. அதனால்தான் வீட்டை விட்டு வெளியில் சென்றேன்' என்று கூறியிருக்கிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.