03/09/2018

சிறுமியிடம் சில்மிஷம் செருப்படி வாங்கிய கணக்கு வாத்தி...


சேலம்: காமம் கண்ணை மறைத்து கொண்டவர்களுக்கு சிறுமி என்ன, கிழவி என்ன? அப்படித்தான் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே வித்யா மந்திர் என்ற உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அதனால் மாணவியின் அம்மா, பிள்ளைகள் எப்போதுமே ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று சொல்வார்கள் என்று நினைத்து வலுக்கட்டாயமாக ஸ்கூலுக்கு கிளப்பினார். ஆனால் சிறுமியின் பிடிவாதம் பலமாக இருக்கவே, சந்தேகம் அடைந்த அம்மா, "குழந்தையை ஏன் போக மாட்டேங்கிறே?" என்று விசாரிக்க ஆரம்பித்தார்.

உடனே சிறுமி தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டார், கணக்கு வாத்தியார் சதீஷ், பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, அவர் தம்மிடம் நடந்து கொள்ளும் விதத்தையும் சிறுமி விவரித்தாள். இதைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சிறுமியிடம் "நாங்கள் பார்த்துக்கறோம், நீ இப்போ ஸ்கூலுக்கு கிளம்பு" என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தனர்.

பின்னர் நேற்று மதியம், உறவினர்களை திரட்டிக் கொண்டு பள்ளி முன் வந்து நின்றனர் பெற்றோர். பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த கணக்கு ஆசிரியர் சதீஷை பள்ளி வளாகத்தை விட்டு வெளியே இழுத்து வந்து போட்டனர். பின்னர் சரமாரியாக அடித்து உதைத்தனர். சிறுமியின் அம்மாவுக்கு ஆத்திரம் ஏறிக் கொண்டே போனது. ஒருகட்டத்தில் செருப்பை கழட்டி வெளுக்க தொடங்கினர்.

இப்படி ஒட்டுமொத்தமாக நம்மை கும்மி எடுப்பார்கள் என்று சதீஷ் கொஞ்சமும் நினைக்கவில்லை. பலத்த காயம் ஏற்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்தார். தகவல் அறிந்து பள்ளப்பட்டி போலீசார் அங்கு வந்தனர். பின்னர் விவரம் கேட்டறிந்து கணக்கு டீச்சர் சதீஷை அங்கிருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

3-ம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் இவ்வளவு தரம்தாழ்ந்து நடக்கும் இந்த கணக்கு ஆசிரியர் இதற்கு முந்தைய காலங்களில் எவ்வளவு கேடு கெட்ட வாழ்க்கையை நடத்தியிருப்பாரோ, எத்தனை பெண்களிடம் இப்படிப்பட்ட வன்மத்தை காட்டி கேவலமாக நடந்து கொண்டிருப்பாரோ தெரியவில்லை. ஆசிரியர்களே ஆனாலும், காமம் தலைக்கேறி இப்படி படிக்கும் குழந்தைகளை தன் இச்சைக்கு பலியாக்க துடிப்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.