03/09/2018

கைதிக்காக கஞ்சா கடத்திய காவலர் பணியிடை நீக்கம்...


சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்காக கஞ்சா கடத்திய காவலரை போலீசார் கைது செய்தனர்.

புழல் மத்திய சிறையில் காவலராக பணியாற்றி வந்த பாலாஜி என்பவர், சிறையில் உள்ள விஜயபாஸ்கர் என்பவருக்கு  கஞ்சாவை பதுக்கி கொண்டு சென்ற போது, சிறை பாதுகாப்பு காவலர்கள் அவரை பரிசோதனை செய்து  கஞ்சாவை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய சிறைத்துறை அதிகாரிகள், புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்தனர்.

சிறைக்குள்ளேயே காவலர் சிறைவாசிக்கு கஞ்சா கொண்டு சென்றபோது கைது செய்யப்பட்ட சம்பவம் சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.