03/10/2018

காதலனை விரட்டிவிட்டு பெண் பலாத்காரம்: ஏற்காட்டில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 2 பேர் கைது...


ஏற்காட்டில் காதலனை விரட்டி விட்டு பெண்ணைப் பலாத்காரம் செய்த ஓட்டுநர்கள் இருவரை போலீஸார் கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை யைச் சேர்ந்தவர் வாசுதேவன், திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.  தன்னுடன் பணியாற் றும் தருமபுரியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை  வாசுதேவன் காதலித்து வருகிறார். வாசுதேவன் நேற்று ஏற்காடு காவல் நிலையத்தில், ஆட்டோ ஓட்டுநர்கள் தன்னைத் தாக்கி விட்டு, காதலியை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

வாசுதேவன் இரண்டு தினங்களுக்கு முன்பு  தனது காதலியுடன் காரில் ஏற்காடு வந்து,  தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். விடுதியில் தங்கியிருந்தபோது, இரவில் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இளம்பெண் கோபித்து கொண்டு நள்ளிரவில் விடுதி அறையை விட்டு வெளியே வந்துள்ளார்.  அண்ணாபூங்கா அருகே வந்த இளம்பெண்ணிடம்  ஏற்காட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்  விஜயகுமார் மற்றும் கார் ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் இருவரும் பேச்சு கொடுத்துள்ளனர். காதலனுடன் கோபித்து கொண்டுவந்துவிட்டதாக கூறியுள்ளார். அப்போது அங்கு வந்த  வாசு தேவன், ஓட்டுநர்கள் விஜயகுமார் மற்றும் ஆரோக்கியதாஸுடன் காதலி இருப்பதை கண்டு தகராறு செய்துள்ளார். விஜயகுமார், ஆரோக்கியதாஸ் இருவரும் வாசுதேவனைத் தாக்கி, அவரிடம் இருந்த மோதிரம், பணத்தைப் பறித்துகொண்டு விரட்டிவிட்டனர்.

விஜயகுமார், ஆரோக்கியதாஸ் இருவரும் ஆட்டோவில் இளம்பெண்ணை அழைத்துச் சென்றனர். பாதி வழியில் ஆரோக்கியதாஸ் இறங்கி கொண்டார். விஜயகுமார் இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு,  வேறு ஒரு விடுதியில் தங்க வைத்து பலாத்காரம் செய்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக வாசுதேவன் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து, ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் ஆரோக்கியதாஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.