03/10/2018

தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் தூய்மைப் பணியின்போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி...


தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் கப்பல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 2 கூலித் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

மாலத்தீவிலிருந்து கற்கள் ஏற்றிச் செல்வதற்காக தூத்துக்குடி பழைய துறைமுகம் வந்த பார்சி என்ற கப்பலின் உட்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஜான்டேவிட்ராஜா, சக்திவேல் ஆகிய இருவர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது விஷ வாயு தாக்கியதில் இருவரும் மயக்கமடைந்தனர். அப்போது அவர்களைக் காப்பாற்ற முயன்ற கோபி என்ற நபரையும் விஷ வாயு தாக்கியுள்ளது. மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சக்திவேலும், ஜான்டேவிட்ராஜாவும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஆபத்தான நிலையில் கோபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.